என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
சப்பாத்திக்கு சூப்பரான சைடு டிஷ் பட்டாணி கோப்தா
Byமாலை மலர்8 March 2017 9:56 AM GMT (Updated: 8 March 2017 9:56 AM GMT)
பட்டாணி கோப்தா மிகவும் சுவைமிக்கது. இந்த கோப்தாவை ரொட்டி மற்றும் சாதத்துடன் சைடு டிஷ்ஷாக வைத்து சாப்பிட்டால் மிகவும் ருசியாக இருக்கும்.
தேவையான பொருட்கள் :
பட்டாணி - 3 கப்
வெங்காயம் - 1
கடலை மாவு - 3 டேபிள் ஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 1/2 டேபிள் ஸ்பூன்
மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு - 1 டேபிள் ஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
மல்லித் தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 2 டீஸ்பூன்
கரம் மசாலா தூள் - 1 டீஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லி - சிறிதளவு
செய்முறை :
* பட்டாணியை வேகவைத்து நன்றாக மசித்து கொள்ளவும்.
* வெங்காயத்தை அரைத்து கொள்ளவும்.
* கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* ஒரு பௌலில் மசித்து வைத்துள்ள பட்டாணியைப் போட்டு, அதோடு கடலை மாவு, 1 டேபிள் ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது, 1 டேபிள் ஸ்பூன் மிளகாய் தூள், எலுமிச்சை சாறு, சிறிது உப்பு சேர்த்து நன்கு கலந்து, சிறு உருண்டைகளாக உருட்டி தனியாக வைத்துக் கொள்ளவும்.
* ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும், அதில் அந்த உருண்டைகளை போட்டு பொரித்து எடுக்கவும்.
* மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும், சீரகம், மீதமுள்ள இஞ்சி பூண்டு விழுது போட்டு வதக்கவும்.
* அடுத்து அதில் அரைத்த வெங்காயத்தை சேர்த்து, சிறிது நேரம் வதக்கவும்.
* வெங்காயம் நன்றாக வதங்கியதும் மிளகாய் தூள், மல்லித் தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா தூள் மற்றும் சிறிது உப்பை சேர்த்து நன்கு வதக்கி, 4 கப் தண்ணீர் விட்டு, கொதிக்க விடவும்.
* நன்றாக கொதிக்க ஆரம்பித்தவுடன் அதில் பொரித்து வைத்துள்ள பட்டாணி கலவையை போட்டு, அடுப்பை மிதமான தீயில் வைத்து சிறிது நேரம் வேக விட்டு கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.
* இப்போது சுவையான பட்டாணி கோப்தா ரெடி!!!
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
பட்டாணி - 3 கப்
வெங்காயம் - 1
கடலை மாவு - 3 டேபிள் ஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 1/2 டேபிள் ஸ்பூன்
மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு - 1 டேபிள் ஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
மல்லித் தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 2 டீஸ்பூன்
கரம் மசாலா தூள் - 1 டீஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லி - சிறிதளவு
செய்முறை :
* பட்டாணியை வேகவைத்து நன்றாக மசித்து கொள்ளவும்.
* வெங்காயத்தை அரைத்து கொள்ளவும்.
* கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* ஒரு பௌலில் மசித்து வைத்துள்ள பட்டாணியைப் போட்டு, அதோடு கடலை மாவு, 1 டேபிள் ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது, 1 டேபிள் ஸ்பூன் மிளகாய் தூள், எலுமிச்சை சாறு, சிறிது உப்பு சேர்த்து நன்கு கலந்து, சிறு உருண்டைகளாக உருட்டி தனியாக வைத்துக் கொள்ளவும்.
* ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும், அதில் அந்த உருண்டைகளை போட்டு பொரித்து எடுக்கவும்.
* மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும், சீரகம், மீதமுள்ள இஞ்சி பூண்டு விழுது போட்டு வதக்கவும்.
* அடுத்து அதில் அரைத்த வெங்காயத்தை சேர்த்து, சிறிது நேரம் வதக்கவும்.
* வெங்காயம் நன்றாக வதங்கியதும் மிளகாய் தூள், மல்லித் தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா தூள் மற்றும் சிறிது உப்பை சேர்த்து நன்கு வதக்கி, 4 கப் தண்ணீர் விட்டு, கொதிக்க விடவும்.
* நன்றாக கொதிக்க ஆரம்பித்தவுடன் அதில் பொரித்து வைத்துள்ள பட்டாணி கலவையை போட்டு, அடுப்பை மிதமான தீயில் வைத்து சிறிது நேரம் வேக விட்டு கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.
* இப்போது சுவையான பட்டாணி கோப்தா ரெடி!!!
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X