என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
குழந்தைகளுக்கு விருப்பமான கொத்தமல்லி புலாவ்
Byமாலை மலர்2 March 2017 9:48 AM GMT (Updated: 2 March 2017 9:48 AM GMT)
குழந்தைகளுக்கு மதிய உணவிற்கு தினமும் ஒவ்வொரு வகையான சாதம் செய்து கொடுக்கலாம். இன்று சத்தான கொத்தமல்லி புலாவ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
கொத்தமல்லி - ஒரு கட்டு
பாசுமதி அரிசி - இரண்டு கப்
வெங்காயம் - 2
தக்காளி - 3
இஞ்சி - ஒரு துண்டு
பூண்டு - எட்டு பல்
பச்சை மிளகாய் - ஐந்து
எண்ணெய் - தேவையான அளவு
பட்டை - ஒன்று
லவங்கம் - ஒன்று
நெய் - தேவைக்கு
செய்முறை :
* தக்காளி, வெங்காயம், இஞ்சியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* கொத்தமல்லியை சுத்தம் செய்து நறுக்கி கொள்ளவும்.
* அரிசியை நன்றாக கழுவி வைக்கவும்.
* சுத்தம் செய்து நறுக்கிய கொத்தமல்லி, தக்காளி, இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் ஆகியவற்றை விழுதாக அரைத்து கொள்ளவும்.
* குக்கரை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி சூடானதும் லவங்கம், பட்டை போட்டு தாளித்த பின் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
* வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதில் அரைத்த பேஸ்டு, உப்பு போட்டு பச்சை வாசனை போகும் வரை நன்றாக வதக்கவும்.
* அடுத்து அதில் கழுவி வைத்த அரிசி போட்டு 5 நிமிடம் வதக்கவும்.
* பின்னர் அதில் மூன்று கப் தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி ஐந்து நிமிடம் சிம்மில் வைத்து 3 விசில் வந்தவுடன் இறக்கி பரிமாறவும்.
* சூப்பரான கொத்தமல்லி புலாவ் ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
கொத்தமல்லி - ஒரு கட்டு
பாசுமதி அரிசி - இரண்டு கப்
வெங்காயம் - 2
தக்காளி - 3
இஞ்சி - ஒரு துண்டு
பூண்டு - எட்டு பல்
பச்சை மிளகாய் - ஐந்து
எண்ணெய் - தேவையான அளவு
பட்டை - ஒன்று
லவங்கம் - ஒன்று
நெய் - தேவைக்கு
செய்முறை :
* தக்காளி, வெங்காயம், இஞ்சியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* கொத்தமல்லியை சுத்தம் செய்து நறுக்கி கொள்ளவும்.
* அரிசியை நன்றாக கழுவி வைக்கவும்.
* சுத்தம் செய்து நறுக்கிய கொத்தமல்லி, தக்காளி, இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் ஆகியவற்றை விழுதாக அரைத்து கொள்ளவும்.
* குக்கரை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி சூடானதும் லவங்கம், பட்டை போட்டு தாளித்த பின் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
* வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதில் அரைத்த பேஸ்டு, உப்பு போட்டு பச்சை வாசனை போகும் வரை நன்றாக வதக்கவும்.
* அடுத்து அதில் கழுவி வைத்த அரிசி போட்டு 5 நிமிடம் வதக்கவும்.
* பின்னர் அதில் மூன்று கப் தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி ஐந்து நிமிடம் சிம்மில் வைத்து 3 விசில் வந்தவுடன் இறக்கி பரிமாறவும்.
* சூப்பரான கொத்தமல்லி புலாவ் ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X