search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    குழந்தைகளுக்கு விருப்பமான கொத்தமல்லி புலாவ்
    X

    குழந்தைகளுக்கு விருப்பமான கொத்தமல்லி புலாவ்

    குழந்தைகளுக்கு மதிய உணவிற்கு தினமும் ஒவ்வொரு வகையான சாதம் செய்து கொடுக்கலாம். இன்று சத்தான கொத்தமல்லி புலாவ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கொத்தமல்லி - ஒரு கட்டு
    பாசுமதி அரிசி - இரண்டு கப்
    வெங்காயம் - 2
    தக்காளி - 3
    இஞ்சி - ஒரு துண்டு
    பூண்டு - எட்டு பல்
    பச்சை மிளகாய் - ஐந்து
    எண்ணெய் - தேவையான அளவு
    பட்டை - ஒன்று
    லவங்கம் - ஒன்று
    நெய் - தேவைக்கு



    செய்முறை :

    * தக்காளி, வெங்காயம், இஞ்சியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * கொத்தமல்லியை சுத்தம் செய்து நறுக்கி கொள்ளவும்.

    * அரிசியை நன்றாக கழுவி வைக்கவும்.

    * சுத்தம் செய்து நறுக்கிய கொத்தமல்லி, தக்காளி, இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் ஆகியவற்றை விழுதாக அரைத்து கொள்ளவும்.

    * குக்கரை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி சூடானதும் லவங்கம், பட்டை போட்டு தாளித்த பின் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

    * வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதில் அரைத்த பேஸ்டு, உப்பு போட்டு பச்சை வாசனை போகும் வரை நன்றாக வதக்கவும்.

    * அடுத்து அதில் கழுவி வைத்த அரிசி போட்டு 5 நிமிடம் வதக்கவும்.

    * பின்னர் அதில் மூன்று கப் தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி ஐந்து நிமிடம் சிம்மில் வைத்து 3 விசில் வந்தவுடன் இறக்கி பரிமாறவும்.

    * சூப்பரான கொத்தமல்லி புலாவ் ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×