search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    தேங்காய் பால் காய்கறி குழம்பு
    X

    தேங்காய் பால் காய்கறி குழம்பு

    காய்கறிகளுடன் தேங்காய் பால் சேர்த்து செய்யும் போது குழம்பு மிகவும் ருசியாக இருக்கும். இப்போது இந்த குழம்பை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    தேங்காய் - 1
    உருளைக்கிழங்கு - 4
    கத்திரிக்காய் - 4
    முருங்கைக்காய் - 1
    எலுமிச்சை - 1/2
    பூண்டு - 1
    மிளகாய் - 4
    மல்லி - 2 டீஸ்பூன்
    சீரகம் - 2 டீஸ்பூன்
    சோம்பு - 1/2 டீஸ்பூன்
    பட்டை - 1
    கிராம்பு - 2
    ஏலக்காய் - 2
    கறிவேப்பிலை - சிறிது
    எண்ணெய் - தேவையான அளவு



    செய்முறை:

    * உருளைக்கிழங்கு, கத்தரிக்காய், முருங்கைக்காயை சமமான துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

    * மிக்ஸியில் மிளகாய், மல்லி, சீரகம் ஆகியவற்றை சேர்த்து, தண்ணீர் ஊற்றி பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.

    * தேங்காயை துருவி, மிக்ஸியில் போட்டு, சிறிது தண்ணீர் ஊற்றி நன்கு அரைத்து, வடிகட்டி பால் எடுத்துக் கொள்ள வேண்டும். பின் மீண்டும் அதில் தண்ணீர் ஊற்றி, தனியாக ஒரு பாத்திரத்தில் இரண்டாவது பால் எடுத்துக் கொள்ள வேண்டும்.

    * இரண்டாவது பாலில் அரைத்து வைத்துள்ள மிளகாய், மல்லி பேஸ்ட்டை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பின்பு அதில் காய்கறிகளை சேர்த்து, உப்பு சிறிது தூவி, அடுப்பில் வைத்து வேக வைக்க வேண்டும்.

    * காய்கறிகளானது வெந்ததும், அதில் முதல் தேங்காய் பாலை ஊற்றி, மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்க விட வேண்டும்.

    * மற்றொரு அடுப்பில் ஒரு வாணலியை வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சோம்பு, பட்டை, கிராம்பு, ஏலக்காய், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, பின் குழம்பில் கொட்ட வேண்டும்.

    * இறுதியில் அதில் எலுமிச்சையை பிழிந்து இறக்கினால், தேங்காய் பால் காய்கறி குழம்பு ரெடி!!!

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×