search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    மாலை நேர ஸ்நாக்ஸ் முந்திரி பக்கோடா
    X

    மாலை நேர ஸ்நாக்ஸ் முந்திரி பக்கோடா

    மாலையில் பள்ளியில் இருந்து வரும் குழந்தைகளுக்கு முந்திரி பக்கோடா செய்து கொடுக்கலாம். இப்போது இந்த முந்திரி பக்கோடாவை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கடலை மாவு - ஒரு கப்,
    அரிசி மாவு - 3 டேபிள்ஸ்பூன்,
    பச்சை மிளகாய் - 3
    புதினா - சிறிதளவு
    முழு முந்திரி - 100 கிராம்,
    உப்பு - தேவைக்கேற்ப,
    நெய் - ஒரு டேபிள்ஸ்பூன்,
    எண்ணெய் -  பொரிப்பதற்கு தேவையான அளவு.



    செய்முறை :

    * ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்

    * புதினாவை அரைத்து கொள்ளவும்.

    * ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, .ப.மிளகாய், புதினா விழுது, முந்திரி, உப்பு சேர்த்து பொருட்களையும் ஒன்றாக சேர்த்து சிறிது சிறிதாக தண்ணீர் தெளித்துப் உதிரியாக பிசைந்து கொள்ளவும்.

    * கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அடுப்பை சிம்’மில் வைத்து, பிசைந்து வைத்த மாவை பக்கோடாக்களாக கிள்ளிப் போட்டு பொரித்து எடுக்கவும்.

    * எண்ணெயை வடியவிட்டு காற்றுப்புகாத டப்பாவில் பத்திரப்படுத்தவும்.

    * சூப்பரான முந்திரி பக்கோடா ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×