search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    சூப்பரான சாமை அரிசி பிரியாணி
    X

    சூப்பரான சாமை அரிசி பிரியாணி

    சிறுதானியங்களை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்வது மிகவும் நல்லது. இன்று சாமை அரிசியை வைத்து சூப்பரான பிரியாணி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :  

    சாமை அரிசி - ஒரு கப்,
    பூண்டு - 2 பல்,
    இஞ்சி - ஒரு சிறிய துண்டு,
    பட்டை - 2,
    ஏலக்காய், பிரியாணி இலை - தலா 1,
    லவங்கம் - 3,
    கலந்த காய்கறி துண்டுகள் (கேரட், உருளைக் கிழங்கு, பீன்ஸ்) - 2 கப்,
    பச்சைப் பட்டாணி - கால் கப்,
    மிளகாய்த் தூள் - கால் டீஸ்பூன்,
    மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை,
    எண்ணெய் - ஒரு டீஸ்பூன்,
    நெய் - ஒரு டீஸ்பூன்,
    கொத்தமல்லித் தழை, புதினா - சிறிதளவு,
    முந்திரி - 5,
    பெரிய வெங்காயம் - 1,
    உப்பு - ஒரு சிட்டிகை,
    தண்ணீர் - 3 கப்,
    தக்காளி - 1,
    தயிர் - சிறிதளவு,
    எலுமிச்சைப் பழம் - பாதி,
    உப்பு - தேவையான அளவு.



    செய்முறை :

    * வெங்காயம், தக்காளி, புதினா, காய்கறிகள், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * சாமை அரிசியைக் கழுவி ஊறவைக்கவும்.

    * கடாயில் எண்ணெய் ஊற்றி பட்டை, லவங்கம், ஏலக்காய், பிரியாணி இலை, நறுக்கிய இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்கவும்.

    * அடுத்து அதில் வெங்காயம், பச்சை மிளகாய், சேர்த்து வதக்கவும்.

    * வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளியை சேர்த்து வதக்கவும்.

    * அடுத்து அதில் காய்கறிகள், பச்சைப் பட்டாணியைச்  சேர்த்துக் கிளறவும்.

    * அடுத்து தயிர், மிளகாய்த் தூள், மஞ்சள்தூள் சேர்க்கவும்.

    * பின்னர் மூன்று கப் தண்ணீர் விட்டு, உப்பு சேர்த்துக் கொதிக்கவிடவும்.

    * கொதி வந்தவுடன் ஊறவைத்த சாமை அரிசியைச் சேர்த்து, மிதமான சூட்டில் வேகவைக்கவும்.

    * அரிசி முக்கால் பாகம் வெந்தவுடன் நறுக்கிய புதினா, கொத்தமல்லி சேர்த்து, நெய் விட்டு, முந்திரியைத் தூவி ஐந்து நிமிடங்கள் மூடிவைக்கவும்.  

    * கடைசியாக எலுமிச்சைச் சாற்றை ஊற்றி, நன்றாகக் கிளறிப் பரிமாறவும்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×