என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
சுவையான முருங்கைக்காய் கூட்டு செய்வது எப்படி
Byமாலை மலர்7 Feb 2017 9:40 AM GMT (Updated: 7 Feb 2017 9:40 AM GMT)
முருங்கைக்காயை சாம்பார், புளிக்குழம்பில்தான் போடுவோம். ஆனால் முருங்கைக்காயை வைத்து கூட்டு வச்சு பாருங்க.. அதோட சுவையும் மணமும் சும்மா சுண்டியிழுக்கும்.
தேவையான பொருட்கள் :
முருங்கைக்காய் - 5
பெரிய வெங்காயம் - 2
பூண்டு - 10 பல்
பெரிய தக்காளி - 2
பச்சை மிளகாய் - 2
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்,
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்,
சோம்பு, சீரகத்தூள் - தலா அரை டீஸ்பூன்.
தாளிக்க :
எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
கடுகு, உ.பருப்பு - தலா 1 டீஸ்பூன்
கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிது.
அரைக்க :
தேங்காய்த் துருவல் - 6 டேபிள்ஸ்பூன்
செய்முறை :
* தேங்காயை கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.
* வெங்காயம், தக்காளியை துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.
* ப.மிளகாயை நீளவாக்கில் வெட்டி கொள்ளவும்.
* கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* முருங்கைக்காயை இரண்டு அல்லது மூன்று இஞ்ச் அளவுக்கு துண்டாக நறுக்கிக் கொள்ளவும்.
* முதலில் வெங்காயம், பூண்டை மிக்சியில் போட்டு கொர கொரப்பாக அரைத்து தனியாக வைக்கவும். அடுத்து அதில் தக்காளியையும் இரண்டு சுற்று சுற்றி எடுக்கவும்.
* குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, உ.பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்த பின் அடுத்து அரைத்த வெங்காயம், பூண்டு, போட்டு நன்றாக வதக்கவும்..
* வெங்காயம் நன்றாக வதங்கியதும் அடுத்து தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து மூடி போட்டு சிறிது வதக்க வேண்டும்.
* அடுத்து மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், சோம்பு, சீரகத்தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.
* அடுத்து அதில் முருங்கைக்காய், சிறிது தண்ணீர் சேர்த்து உப்பும் சேர்த்து கொதிக்க விடவும்.
* கொதி வந்தவுடன் கொர கொரப்பாக அரைத்த தேங்காயை சேர்க்கவும்.
* இப்போது குக்கரை மூடி ஒரு விசில் விடவும். ஒரே விசில் தான் பக்குவமாக வெந்து விடும். அடுப்பை அணைக்கவும்.
* வெந்ததும் மூடியை திறந்து கொத்தமல்லி தழை தூவி நன்றாக கிளறி இறக்கி பரிமாறவும்.
* சுவையான முருங்கைக்காய் கூட்டு தயார்.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
முருங்கைக்காய் - 5
பெரிய வெங்காயம் - 2
பூண்டு - 10 பல்
பெரிய தக்காளி - 2
பச்சை மிளகாய் - 2
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்,
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்,
சோம்பு, சீரகத்தூள் - தலா அரை டீஸ்பூன்.
தாளிக்க :
எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
கடுகு, உ.பருப்பு - தலா 1 டீஸ்பூன்
கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிது.
அரைக்க :
தேங்காய்த் துருவல் - 6 டேபிள்ஸ்பூன்
செய்முறை :
* தேங்காயை கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.
* வெங்காயம், தக்காளியை துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.
* ப.மிளகாயை நீளவாக்கில் வெட்டி கொள்ளவும்.
* கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* முருங்கைக்காயை இரண்டு அல்லது மூன்று இஞ்ச் அளவுக்கு துண்டாக நறுக்கிக் கொள்ளவும்.
* முதலில் வெங்காயம், பூண்டை மிக்சியில் போட்டு கொர கொரப்பாக அரைத்து தனியாக வைக்கவும். அடுத்து அதில் தக்காளியையும் இரண்டு சுற்று சுற்றி எடுக்கவும்.
* குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, உ.பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்த பின் அடுத்து அரைத்த வெங்காயம், பூண்டு, போட்டு நன்றாக வதக்கவும்..
* வெங்காயம் நன்றாக வதங்கியதும் அடுத்து தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து மூடி போட்டு சிறிது வதக்க வேண்டும்.
* அடுத்து மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், சோம்பு, சீரகத்தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.
* அடுத்து அதில் முருங்கைக்காய், சிறிது தண்ணீர் சேர்த்து உப்பும் சேர்த்து கொதிக்க விடவும்.
* கொதி வந்தவுடன் கொர கொரப்பாக அரைத்த தேங்காயை சேர்க்கவும்.
* இப்போது குக்கரை மூடி ஒரு விசில் விடவும். ஒரே விசில் தான் பக்குவமாக வெந்து விடும். அடுப்பை அணைக்கவும்.
* வெந்ததும் மூடியை திறந்து கொத்தமல்லி தழை தூவி நன்றாக கிளறி இறக்கி பரிமாறவும்.
* சுவையான முருங்கைக்காய் கூட்டு தயார்.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X