என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
கேரளா ஸ்பெஷல் மீன் மொய்லி
Byமாலை மலர்6 Feb 2017 9:57 AM GMT (Updated: 6 Feb 2017 9:57 AM GMT)
கேரளாவில் மீன் குழம்பு சூப்பராக இருக்கும். அதிலும் மீன் மொய்லி இன்னும் அருமையாக இருக்கும். இப்போது கேரளா ஸ்டைல் மீன் மொய்லி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
வாவல் மீன்/கிங்பிஷ் - 250 கிராம்
வெங்காயம் - 1
பச்சை மிளகாய - 2
தக்காளி - 1
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்
மிளகு தூள் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
தேங்காய் பால் - 1 கப்
கறிவேப்பிலை - சிறிது
கடுகு - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு - 1 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
கொத்தமல்லி - 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை :
* வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* ப.மிளகாயை நீளவாக்கில் வெட்டி கொள்ளவும்.
* தக்காளியை பெரிய துண்டுகளாக வெட்டி கொள்ளவும்.
* மீனை நன்கு சுத்தமாக கழுவி, அதனை ஒரு பாத்திரத்தில் போட்டு, அதில் எலுமிச்சை சாறு, உப்பு மற்றும் 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பிரட்டி 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, பின் நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்க வேண்டும்.
* வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் அத்துடன் இஞ்சி பூண்டு பேஸ்ட், பச்சை மிளகாய், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து சிறிது வதக்கிய பின்னர் தேங்காய் பால், தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க விட வேண்டும்.
* குழம்பானது கொதிக்க ஆரம்பித்ததும், அதில் ஊற வைத்துள்ள மீன் துண்டுகள், தக்காளியை சேர்த்து, 10 நிமிடம் குறைவான தீயில் மூடி போட்டு கொதிக்க விட வேண்டும்.
* குழம்பு திக்கான பதம் வந்தவுடன் அதில் மிளகு தூள், கொத்தமல்லி தழை தூவி கிளறி, இறக்கவும்.
* சுவையான கேரளா ஸ்டைல் குழம்பான மீன் மொய்லி ரெடி!!!
* இது சாதத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும்.
குறிப்பு :
இந்த குழம்பிற்கு வாவல் மீன் அல்லது கிங்பிஷ் மீனைக் கொண்டு செய்யலாம். தக்காளி துண்டுகளாக இருந்தால் தான் நன்றாக இருக்கும்.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
வாவல் மீன்/கிங்பிஷ் - 250 கிராம்
வெங்காயம் - 1
பச்சை மிளகாய - 2
தக்காளி - 1
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்
மிளகு தூள் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
தேங்காய் பால் - 1 கப்
கறிவேப்பிலை - சிறிது
கடுகு - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு - 1 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
கொத்தமல்லி - 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை :
* வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* ப.மிளகாயை நீளவாக்கில் வெட்டி கொள்ளவும்.
* தக்காளியை பெரிய துண்டுகளாக வெட்டி கொள்ளவும்.
* மீனை நன்கு சுத்தமாக கழுவி, அதனை ஒரு பாத்திரத்தில் போட்டு, அதில் எலுமிச்சை சாறு, உப்பு மற்றும் 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பிரட்டி 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, பின் நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்க வேண்டும்.
* வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் அத்துடன் இஞ்சி பூண்டு பேஸ்ட், பச்சை மிளகாய், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து சிறிது வதக்கிய பின்னர் தேங்காய் பால், தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க விட வேண்டும்.
* குழம்பானது கொதிக்க ஆரம்பித்ததும், அதில் ஊற வைத்துள்ள மீன் துண்டுகள், தக்காளியை சேர்த்து, 10 நிமிடம் குறைவான தீயில் மூடி போட்டு கொதிக்க விட வேண்டும்.
* குழம்பு திக்கான பதம் வந்தவுடன் அதில் மிளகு தூள், கொத்தமல்லி தழை தூவி கிளறி, இறக்கவும்.
* சுவையான கேரளா ஸ்டைல் குழம்பான மீன் மொய்லி ரெடி!!!
* இது சாதத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும்.
குறிப்பு :
இந்த குழம்பிற்கு வாவல் மீன் அல்லது கிங்பிஷ் மீனைக் கொண்டு செய்யலாம். தக்காளி துண்டுகளாக இருந்தால் தான் நன்றாக இருக்கும்.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X