search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    சூப்பரான காடை முட்டை குழம்பு
    X

    சூப்பரான காடை முட்டை குழம்பு

    காடை முட்டை குழம்பு சாப்பிட்டு இருக்கீங்களா. சூப்பரான இருக்கும். இன்று காடை முட்டையில் குழம்பு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    காடை முட்டை - 20
    எண்ணெய் - தேவையான அளவு
    சீரகம் - 1 தேக்கரண்டி
    வெங்காயம் - 1
    கறிவேப்பிலை - ஒரு கைப்பிடியளவு
    இஞ்சி-பூண்டு விழுது - 1 மேஜைக்கரண்டி
    மஞ்சள்தூள் - 1 தேக்கரண்டி
    தக்காளி - 2 (விழுதாக அரைத்தது)
    பச்சை மிளகாய் - 2
    உப்பு - தேவையான அளவு
    மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
    மல்லித் தூள் - 1 மேஜைக்கரண்டி
    கரம்மசாலா தூள் - 1 மேஜைக்கரண்டி
    நீர் - தேவையான அளவு
    கொத்தமல்லித்தழை - ஒரு கைப்பிடியளவு

    செய்முறை :

    * தக்காளியை விழுதாக அரைத்து கொள்ளவும்.

    * வெங்காயம், கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * காடை முட்டையை வேக வைத்து கொள்ளவும். அவற்றை குளிர்ந்த நீரில் கழுவி அதன் ஓடுகளை உடைத்து தனியே வைக்கவும்

    * கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் சீரகத்தை போட்டு தாளித்த பின் வெங்காயம், ப.மிளகாய், கறிவேப்பிலை போட்டு நன்றாக வதக்கவும்.

    * அடுத்து மஞ்சள் தூள் சேர்க்கவும்

    * வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

    * அடுத்து அதில் மசாலா தூள்களை சேர்த்து நன்கு கிளறவும்

    * மசாலா வாசனை போனவுடன் தக்காளி விழுது சேர்த்து நன்கு கிளறவும். எண்ணெய் தனியாக பிரிந்து வரும் வரை நன்கு கிளறவும்

    * அடுத்து அதில் 1 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.

    * கொதிக்க ஆரம்பித்தவுடன் காடை முட்டைகளை போட்டு அடுப்பை மிதமான தீயில் வைத்து 10 நிமிடம் கொதிக்க விடவும்.

    * குழம்பு திக்கான பதம் வந்தவுடன் கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.

    * காடை முட்டை குழம்பு ரெடி!!

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×