search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    மாலை நேர ஸ்நாக்ஸ் உருளைக்கிழங்கு மசாலா போளி
    X

    மாலை நேர ஸ்நாக்ஸ் உருளைக்கிழங்கு மசாலா போளி

    குழந்தைக்கு உருளைக்கிழங்கு ரொம்ப பிடிக்கும். மாலையில் பள்ளியில் இருந்து வரும் குழந்தைகளுக்கு உருளைக்கிழங்கை வைத்து போளி செய்து கொடுத்து அசத்துங்கள்.
    தேவையான பொருட்கள் :
     
    உருளைக்கிழங்கு - 4
    கடலை பருப்பு - ஒரு மேஜைக்கரண்டி
    உளுத்தம் பருப்பு - ஒரு மேஜைக்கரண்டி
    முந்திரி பருப்பு - எட்டு
    மைதா மாவு - இரண்டு கப்
    பச்சை மிளகாய் - ஒன்று
    கறிவேப்பில்லை - சிறிதளவு
    கொத்தமல்லி - சிறிதளவு
    கடுகு - ஒரு டீஸ்பூன்
    மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்
    உப்பு - தேவைகேற்ப
    நல்லெண்ணெய் - இரண்டு மேஜைக்கரண்டி
    நெய் - தேவையான அளவு



    செய்முறை :

    * உருளைக்கிழங்கை வேகவைத்து மசித்து கொள்ளவும்.

    * ப.மிளகாய், கொத்தமல்லி, கறிவேப்பிலையை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி போட்டு வதக்கவும்.

    * அடுத்து அதில், மசித்த உருளைக்கிழங்கு, உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து கலந்து வைத்து கொள்ளவும்.
     
    * ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, உப்பு, எண்ணெய் சிறிதளவு, தண்ணீர் சேர்த்து நன்றாக சப்பாத்தி மாவு போன்று சற்று தளர்வான பதத்திற்கு பிசைந்து கொள்ளவும். மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி கொள்ளவும்.
     
    * பிறகு, ஒரு உருண்டை மாவை எடுத்து அதை வாழை இலையில் வைத்து தட்டி நடுவில் உருளைக்கிழங்கு பூரணம் வைத்து மூடி மறுபடியும் மெல்லியதாக தட்டிக்கொள்ளவும்.

    * தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் தட்டி வைத்த போளியை போட்டு சுற்றி நெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு சுட்டு எடுக்கவும்.

    * சுவையான உருளைக்கிழங்கு மசாலா போளி தயார்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×