search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    தித்திப்பான கேரட் ஜவ்வரிசி பாயாசம்
    X

    தித்திப்பான கேரட் ஜவ்வரிசி பாயாசம்

    ஜவ்வரிசி பாயாசம் சாப்பிட்டு இருப்பீர்கள். ஜவ்வரிசியோடு, கேரட் சேர்த்து பாயாசம் செய்வதால் சூப்பராக இருக்கும். இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கேரட் (பெரியது) - 1
    ஜவ்வரிசி - 3 டேபிள்ஸ்பூன்
    பால் - 1/2 லிட்டர் (2 பெரிய டம்ளர்)
    சர்க்கரை - 3 முதல் 4 டேபிள் ஸ்பூன் வரை
    முந்திரிப்பருப்பு - 20
    பாதாம் - 15
    காய்ந்த திராட்சை - சிறிது
    ஏலக்காய்த்தூள் - 2 சிட்டிகை
    நெய் - 1 டீஸ்பூன்

    செய்முறை :

    * ஜவ்வரிசியை தண்ணீரில் 1 மணி நேரம் ஊற வைக்கவும்.

    * பாதாமை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * 10 முந்திரி பருப்பை சிறிது பாலில் 20 முதல் 30 நிமிடங்கள் வரை ஊற விடவும்.

    * கேரட்டைக் கழுவி, தோலை சீவி விட்டு, சிறு துண்டுகளாக நறுக்கி, சிறிது தண்ணீரைச் சேர்த்து வேக வைத்தெடுக்கவும்.

    * ஊறிய ஜவ்வரிசியைக் கழுவி, நீரை வடிகட்டி விட்டு, 1 அல்லது 2 கப் தண்ணீரைச் சேர்த்து வேக விடவும். ஜவ்வரிசி மினுமினுப்பாக வெந்ததும் இறக்கி வைக்கவும்.

    * மிக்ஸியில், வெந்த கேரட்டையும், ஊற வைத்துள்ள முந்திரியையும் ஊற வைத்த பாலுடன் சேர்த்து விழுதாக அரைத்தெடுக்கவும்.

    * அடி கனமான பாத்திரத்தில் பாலை ஊற்றி பால் கொதிக்க ஆரம்பித்ததும், அடுப்பை மிதமான தீயில் வைத்து, கேரட் விழுது, வெந்த ஜவ்வரிசி, சர்க்கரை ஆகியவற்றைச் சேர்த்துக் கிளறி சில நிமிடங்கள் கொதிக்க விடவும்.

    * மீதமுள்ள முந்திரிப்பருப்பையும், திராட்சையையும் நெய்யில் வறுத்து பாயசத்தில் சேர்க்கவும்.

    * கடைசியில் பாதாம், ஏலக்காய்த்தூளைத் தூவிக் கலந்து, இறக்கி வைக்கவும். சூடாகவோ அல்லது குளிர வைத்தோ சாப்பிடலாம்.

    * தித்திப்பான கேரட் ஜவ்வரிசி பாயாசம் ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×