search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    செட்டிநாடு வெள்ளை பணியாரம் செய்வது எப்படி
    X

    செட்டிநாடு வெள்ளை பணியாரம் செய்வது எப்படி

    இந்த வெள்ளை பணியாரத்தை செய்வது மிகவும் சுலபம். மாலையில் சூடாக சாப்பிட சுவையான வெள்ளை பணியாரம் செய்து எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பச்சரிசி - ஒரு கப்,
    உளுந்து - 4 டேபிள்ஸ்பூன்,
    நெய் - 2 டீஸ்பூன்,
    சர்க்கரை - ஒரு டீஸ்பூன்,
    எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு,
    உப்பு - தேவையான அளவு.

    செய்முறை :

    * அரிசி, உளுந்தை சேர்த்து சுத்தம் செய்து 2 மணி நேரம் ஊறவிடவும்.

    * நன்றாக ஊறிய பிறகு உப்பு, சர்க்கரை சேர்த்து நைஸாக அரைக்கவும் (தோசை மாவு பதத்தில் இருக்க வேண்டும்).

    * வாணலியில் எண்ணெய், நெய் ஊற்றி, காய்ந்ததும் வட்ட வடிவ அகலக் கரண்டியால் மாவை ஊற்றவும். ஒருபுறம் வெந்ததும் மறுபுறம் திருப்பி போட்டு வேகவிடவும். இதை ஒவ்வொன்றாகத்தான் செய்ய வேண்டும்.

    * சுவையான செட்டிநாடு வெள்ளை பணியாரம் ரெடி.

    குறிப்பு:  மாவு புளிக்கக் கூடாது. அரைத்த 10 நிமிடத்தில் செய்யவும். இதற்கு கார சட்னி சூப்பர் காம்பினேஷன்!

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×