search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    சூப்பரான பன்னீர் - பச்சைப்பட்டாணி குருமா
    X

    சூப்பரான பன்னீர் - பச்சைப்பட்டாணி குருமா

    பன்னீருடன் பச்சைப்பட்டாணி சேர்த்து செய்யும் குருமா சூப்பராக இருக்கும். இந்த குருமாவை எப்படி செய்வது என்று கீழே பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பன்னீர் - 200 கிராம்
    பச்சைப் பட்டாணி - அரை கப்
    சின்ன வெங்காயம் - 50 கிராம்
    தக்காளி - 1 பெரியது
    இஞ்சி - சிறு துண்டு
    பூண்டு - 3 பல்
    மிளகாய்த்தூள் - ஒன்றரை டேபிள்ஸ்பூன்
    மஞ்சள் தூள் - சிறிது
    எலுமிச்சை சாறு - 1 ஸ்பூன்
    கொத்தமல்லி தழை - ஒரு கொத்து
    புதினா - ஒரு கொத்து
    உப்பு - தேவைக்கு

    அரைக்க :

    தேங்காய் பத்தை - 3
    கசகசா - ஒரு டீஸ்பூன்
    முந்திரி - 10 (அல்லது) சிறிது பொட்டுக்கடலை

    தாளிக்க :

    எண்ணெய்
    கிராம்பு - 3
    பட்டை - சிறு துண்டு
    சீரகம்
    பெருஞ்சீரகம்
    வெந்தயம் - 4 (வாசனைக்கு)

    செய்முறை :

    * பச்சைப்பட்டாணியை முதல் நாள் இரவே ஊற வைத்துவிட‌வும்.

    * வெங்காயம், தக்காளி இவற்றை நறுக்கி மிக்ஸியில் போட்டு அரைத்து எடுத்துக்கொள்ளவும்..

    * இஞ்சி, பூண்டு தட்டிக்கொள்ள‌வும்.

    * பன்னீரை சிறிய துண்டுகளாக வெட்டி வைக்கவும்.

    * அரைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை மிக்சியில் போட்டு நைசாக அரைத்து கொள்ளவும்.

    * கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய்விட்டு சூடானதும் தாளிக்க வேண்டியவற்றைத் தாளித்த பின் இஞ்சி பூண்டு போட்டு வதக்கவும்.

    * பிறகு வெங்காயம், தக்காளி அரைத்த விழுதை சேர்த்து பச்சை வாசம் போக நன்றாக வதக்கவும்.

    * அடுத்து பட்டாணியை சேர்த்து 5 நிமிடம் வதக்கிவிட்டு, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து மூடி வைத்து கொதிக்க விடவும்.

    * மற்றொரு கடாய் அல்லது தோசைக்கல்லை அடுப்பிலேற்றி சிறிது எண்ணெய் விட்டு சூடானதும் பன்னீரை போட்டு லேசாக நிறம் மாறும் வரை வதக்கி எடுக்கவும்.

    * குருமா கொதிக்க ஆரம்பித்ததும் பன்னீர் துண்டுகளை சேர்த்து கிண்டிவிட்டு கொதிக்க‌விடவும்.

    * குருமா நன்றாகக் கொதித்த பிறகு தேங்காய், கசகசா, முந்திரி அரைத்த விழுதை குருமாவில் சேர்க்கவும்.

    * எல்லாம் சேர்ந்து கொதித்து ஓரங்களில் எண்ணெய் பிரிந்து வரும் போது எலுமிச்சை சாறு, கொத்துமல்லி, புதினா சேர்த்து இறக்கவும்.

    * சூப்பரான பன்னீர் - பச்சைப்பட்டாணி குருமா

    * இது சாதம், சப்பாத்தி, பரோட்டா இவற்றிற்கு சூப்பராக இருக்கும்.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×