search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    சன்டே ஸ்பெஷல்: ஆந்திரா ஸ்டைல் ஃபிஷ் பிரை
    X

    சன்டே ஸ்பெஷல்: ஆந்திரா ஸ்டைல் ஃபிஷ் பிரை

    ஆந்திரா என்றாலே காரசாரமான உணவுகள் தான் நினைவுக்கு வரும். நாளை (சன்டே) ஆந்திரா ஸ்டைலில் மீனை நன்கு காரசாரத்துடன் ஃப்ரை செய்து அசத்துங்கள்.
    தேவையான பொருட்கள் :

    மீன் - 8 துண்டுகள் (துண்டு மீன்)
    கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி
    எண்ணெய் - தேவையான அளவு
    உப்பு - தேவையான அளவு

    மசாலாவிற்கு...

    வெங்காயம் - 1
    பூண்டு - 5 பல்
    இஞ்சி - 1 இன்ச்
    சீரகம் - 1 டீஸ்பூன்
    தனியா - 1 டீஸ்பூன்
    சோம்பு - 1 டீஸ்பூன்
    வர மிளகாய் - 4
    மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
    கரம் மசாலா தூள் - 1/2 டீஸ்பூன்

    செய்முறை :

    * வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * மீனை துண்டுகளாக நறுக்கி நன்கு கழுவி, சுத்தம் செய்து வைத்து கொள்ள வேண்டும்.

    * வாணலியை அடுப்பில் வைத்து சூடாதும் அதில் 1 ஸ்பூன் ஊற்றி மசாலாவிற்கு கொடுத்துள்ள பொருட்கள் அனைத்தையும் ஒன்றன்பின் ஒன்றாக போட்டு நன்றாக வறுத்து ஆற வைத்து மிக்சியில் போட்டு நன்கு பேஸ்ட் போல் நைஸாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

    * பின்னர் அந்த மசாலாவுடன், தேவையான அளவு உப்பு சேர்த்து மீனின் மீது தடவி, அரை மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.

    * ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, கறிவேப்பிலை சேர்த்து பொரித்துக் கொள்ள வேண்டும்.

    * பின்பு ஊற வைத்துள்ள மீன் துண்டுகளை அந்த எண்ணெயில் போட்டு, இருபுறமும் பிரட்டி பொன்னிறமாக வறுத்து எடுக்க வேண்டும்.

    * இப்போது சுவையான ஆந்திரா ஸ்டைல் ஃபிஷ் ப்ரை ரெடி!!!

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×