என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
தித்திப்பான அரிசி பாயாசம் செய்வது எப்படி
Byமாலை மலர்18 Nov 2016 8:57 AM GMT (Updated: 18 Nov 2016 8:57 AM GMT)
ஜவ்வரிசி பாயாசத்தை விட அரிசி பாயாசம் சூப்பராக இருக்கும். இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
பச்சரிசி - அரை கப்
வெல்லம் பொடித்தது - 1 கப்
தேங்காய்த்துருவல் - 2 கப்
ஏலக்காய் பொடி - 1/2 டீஸ்பூன்
நெய் - 2 டீஸ்பூன்
தேங்காய் (பல்லு பல்லாக நறுக்கியது) - 2 டேபிள் ஸ்பூன்
முந்திரி - தேவைக்கு
திராட்சை - தேவைக்கு
செய்முறை :
* அரிசியை நன்றாக கழுவி ஒரு மணி நேரம் ஊறவைத்து, தண்ணீரை வடிகட்டி விட்டு, தேங்காய்த்துருவலுடன் சேர்த்து மிக்ஸியில் போட்டு கொரகொரப்பாக அரைத்தெடுக்கவும்.
* வெல்லத்தில் 1/2 கப் தண்ணீரைச் சேர்த்து கொதிக்கவிட்டு, வெல்லம் கரைந்ததும் வடிகட்டி எடுத்து வைத்துக் கொள்ளவும்.
* ஒரு அடி கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து சூடானதும் அதில் 4 கப் தண்ணீரை விட்டு நன்றாகக் கொதிக்க ஆரம்பிக்கும் பொழுது அடுப்பை சிறு தீயில் வைத்து, அரைத்து வைத்துள்ள அரிசி, தேங்காய் விழுதைச் சேர்த்துக் கிளறி விடவும். சற்று கெட்டியாகும் வரை கை விடாமல் கிளறிக் கொண்டே இருக்கவும்.
* பின்னர் அதில் கரைத்த வெல்லத்தை சேர்த்து மீண்டும் நன்றாகக் கிளறி விடவும்.
* பாயாசம் நன்றாகக் கொதிக்க ஆரம்பித்ததும், ஏலப்பொடியைத் தூவி இறக்கி வைக்கவும்.
* கடாயை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி சூடானதும் பொடியாக நறுக்கிய தேங்காய், முந்திரி, திராட்சையை போட்டு சிவக்க வறுத்து பாயாசத்தில் சேர்த்துக் கலந்து பரிமாறவும்.
* தித்திப்பான அரிசி பாயாசம் ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
பச்சரிசி - அரை கப்
வெல்லம் பொடித்தது - 1 கப்
தேங்காய்த்துருவல் - 2 கப்
ஏலக்காய் பொடி - 1/2 டீஸ்பூன்
நெய் - 2 டீஸ்பூன்
தேங்காய் (பல்லு பல்லாக நறுக்கியது) - 2 டேபிள் ஸ்பூன்
முந்திரி - தேவைக்கு
திராட்சை - தேவைக்கு
செய்முறை :
* அரிசியை நன்றாக கழுவி ஒரு மணி நேரம் ஊறவைத்து, தண்ணீரை வடிகட்டி விட்டு, தேங்காய்த்துருவலுடன் சேர்த்து மிக்ஸியில் போட்டு கொரகொரப்பாக அரைத்தெடுக்கவும்.
* வெல்லத்தில் 1/2 கப் தண்ணீரைச் சேர்த்து கொதிக்கவிட்டு, வெல்லம் கரைந்ததும் வடிகட்டி எடுத்து வைத்துக் கொள்ளவும்.
* ஒரு அடி கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து சூடானதும் அதில் 4 கப் தண்ணீரை விட்டு நன்றாகக் கொதிக்க ஆரம்பிக்கும் பொழுது அடுப்பை சிறு தீயில் வைத்து, அரைத்து வைத்துள்ள அரிசி, தேங்காய் விழுதைச் சேர்த்துக் கிளறி விடவும். சற்று கெட்டியாகும் வரை கை விடாமல் கிளறிக் கொண்டே இருக்கவும்.
* பின்னர் அதில் கரைத்த வெல்லத்தை சேர்த்து மீண்டும் நன்றாகக் கிளறி விடவும்.
* பாயாசம் நன்றாகக் கொதிக்க ஆரம்பித்ததும், ஏலப்பொடியைத் தூவி இறக்கி வைக்கவும்.
* கடாயை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி சூடானதும் பொடியாக நறுக்கிய தேங்காய், முந்திரி, திராட்சையை போட்டு சிவக்க வறுத்து பாயாசத்தில் சேர்த்துக் கலந்து பரிமாறவும்.
* தித்திப்பான அரிசி பாயாசம் ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X