என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
வறுத்தரைத்த சாளை மீன் குழம்பு
Byமாலை மலர்7 Nov 2016 9:08 AM GMT (Updated: 7 Nov 2016 9:08 AM GMT)
நெல்லை மாவட்டங்களில் இந்த மீன் குழம்பு மிக பிரபலம். இந்த மீன் குழம்பை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
சாளை மீன் - 20
புளி - எலுமிச்சை அளவு
பச்சை மிளகாய் -1
பூண்டு - 4 பல்
வறுத்து அரைக்க :
எண்ணெய் - 2 டீஸ்பூன்
தேங்காய்த் துருவல் - கால் கப்
சின்ன வெங்காயம் - 15
மிளகு - 10
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
மல்லித்தூள் - 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
தாளிக்க :
எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
சின்ன வெங்காயம் - 5
கடுகு - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது.
செய்முறை :
* மீனை செதில் நீக்கி தலை வயிறு, பகுதி கழிவை நீக்கி நன்கு கழுவி சுத்தம் செய்து தண்ணீரை வடிகட்டவும்.
* புளியை கரைத்து வைக்கவும்.
* கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி தேங்காய்த் துருவல், சின்ன வெங்காயம், மிளகு, மிளகாய் தூள், தனியா தூள், மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக வறுத்து ஆற வைத்து மிக்சியில் போட்டு நைசாக அரைத்து கொள்ளவும்.
* வறுத்து அரைத்த விழுதுடன் தேவைக்கு தண்ணீர், புளித்தண்ணீர், உப்பு, கீறிய பச்சை மிளகாய், பூண்டு சேர்த்து மண் சட்டியில் கொதிக்க வைக்கவும். பச்சை வாடை போகும் வரை கொதிக்க விடவும்.
* பச்சை வாடை போனவுடன் அதில் சாளை மீனை சேர்த்து 5 நிமிடம் வேக விடவும்.
* ஒரு தாளிப்பு கரண்டியில் எண்ணெய் காயவிட்டு கடுகு, கறிவேப்பிலை போட்டு வெடித்ததும் வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கி தயாரான மீன் குழம்பில் சேர்த்து கலந்து அடுப்பை சிம்மில் 5 நிமிடம் வைத்து இறக்கி பரிமாறவும்.
* சுவையான வறுத்தரைத்த சாளை மீன் குழம்பு ரெடி.
* இந்த மீன் குழம்பை மண் சட்டியில் செய்தால் மிகவும் சுவையாக இருக்கும்.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
சாளை மீன் - 20
புளி - எலுமிச்சை அளவு
பச்சை மிளகாய் -1
பூண்டு - 4 பல்
வறுத்து அரைக்க :
எண்ணெய் - 2 டீஸ்பூன்
தேங்காய்த் துருவல் - கால் கப்
சின்ன வெங்காயம் - 15
மிளகு - 10
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
மல்லித்தூள் - 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
தாளிக்க :
எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
சின்ன வெங்காயம் - 5
கடுகு - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது.
செய்முறை :
* மீனை செதில் நீக்கி தலை வயிறு, பகுதி கழிவை நீக்கி நன்கு கழுவி சுத்தம் செய்து தண்ணீரை வடிகட்டவும்.
* புளியை கரைத்து வைக்கவும்.
* கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி தேங்காய்த் துருவல், சின்ன வெங்காயம், மிளகு, மிளகாய் தூள், தனியா தூள், மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக வறுத்து ஆற வைத்து மிக்சியில் போட்டு நைசாக அரைத்து கொள்ளவும்.
* வறுத்து அரைத்த விழுதுடன் தேவைக்கு தண்ணீர், புளித்தண்ணீர், உப்பு, கீறிய பச்சை மிளகாய், பூண்டு சேர்த்து மண் சட்டியில் கொதிக்க வைக்கவும். பச்சை வாடை போகும் வரை கொதிக்க விடவும்.
* பச்சை வாடை போனவுடன் அதில் சாளை மீனை சேர்த்து 5 நிமிடம் வேக விடவும்.
* ஒரு தாளிப்பு கரண்டியில் எண்ணெய் காயவிட்டு கடுகு, கறிவேப்பிலை போட்டு வெடித்ததும் வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கி தயாரான மீன் குழம்பில் சேர்த்து கலந்து அடுப்பை சிம்மில் 5 நிமிடம் வைத்து இறக்கி பரிமாறவும்.
* சுவையான வறுத்தரைத்த சாளை மீன் குழம்பு ரெடி.
* இந்த மீன் குழம்பை மண் சட்டியில் செய்தால் மிகவும் சுவையாக இருக்கும்.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X