என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
தீபாவளி ஸ்பெஷல் முந்திரி - பாதாம் ரோல்
Byமாலை மலர்28 Oct 2016 8:45 AM GMT (Updated: 28 Oct 2016 8:46 AM GMT)
குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த முந்திரி, பாதாமை வைத்து ஒரு புதிய இனிப்பை இந்த தீபாவளிக்கு முயற்சி செய்து பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
முந்திரி, சர்க்கரை - தலா முக்கால் கப்.
பாதாம் - அரை கப்.
சர்க்கரைத்தூள் - ஒரு ஸ்பூன்.
ரோஸ் எசன்ஸ் - சில துளிகள்.
பச்சை கலர் பவுடர் - சிறிதளவு.
செய்முறை :
* முந்திரியை மிதமான தீயில் பொன்னிறமாக வறுத்து மிக்ஸியில் பொடியாக்கி அதனை ஒரு பெரிய பாத்திரத்தில் போட்டு ரோஸ் எசன்ஸ் சேர்த்து கலக்கவும்.
* அடி கனமாக பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் சர்க்கரையுடன் சிறிது தண்ணீர் சேர்த்து கம்பிப் பாகு பதம் வந்ததும் இறக்கி, முந்திரி பவுடரில் சிறிது சிறிதாக ஊற்றி நன்றாகக் கலந்து, சப்பாத்தி மாவு போல பிசைந்து கொள்ளவும்.
* சிறிது சூடு இருக்கும்போதே நெய் தடவிய தடிமனான பிளாஸ்டிக் ஷீட்டின் மேல் மாவை வைத்து அதன் மேல் மற்றொரு நெய் தடவிய பிளாஸ்டிக் ஷீட்டை வைத்து சப்பாத்தி குழவியால் உருட்டி மெல்லிய சப்பாத்தியாக இடவும்.
* வெறும் கடாயில் பாதாம்பருப்பை போட்டு வறுத்து பொடியாகி, அதனுடன் கலர் பவுடர், சர்க்கரைத்தூள் சேர்க்கவும்.
* ரோல் செய்த முந்திரி சப்பாத்தியின் மேல் இருக்கும் ஷீட்டை எடுத்துவிட்டு, அதன் மேல் பாதாம் பவுடரைத் தூவி, பாய் போல சுருட்டி, துண்டுகளாக வெட்டு சாப்பிடவும்.
* குழந்தைகளுக்கு பிடித்தமான இந்த முந்திரி - பாதாம் ரோல், சத்தானதாகவும் சுவையாகவும் இருக்கும்.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
முந்திரி, சர்க்கரை - தலா முக்கால் கப்.
பாதாம் - அரை கப்.
சர்க்கரைத்தூள் - ஒரு ஸ்பூன்.
ரோஸ் எசன்ஸ் - சில துளிகள்.
பச்சை கலர் பவுடர் - சிறிதளவு.
செய்முறை :
* முந்திரியை மிதமான தீயில் பொன்னிறமாக வறுத்து மிக்ஸியில் பொடியாக்கி அதனை ஒரு பெரிய பாத்திரத்தில் போட்டு ரோஸ் எசன்ஸ் சேர்த்து கலக்கவும்.
* அடி கனமாக பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் சர்க்கரையுடன் சிறிது தண்ணீர் சேர்த்து கம்பிப் பாகு பதம் வந்ததும் இறக்கி, முந்திரி பவுடரில் சிறிது சிறிதாக ஊற்றி நன்றாகக் கலந்து, சப்பாத்தி மாவு போல பிசைந்து கொள்ளவும்.
* சிறிது சூடு இருக்கும்போதே நெய் தடவிய தடிமனான பிளாஸ்டிக் ஷீட்டின் மேல் மாவை வைத்து அதன் மேல் மற்றொரு நெய் தடவிய பிளாஸ்டிக் ஷீட்டை வைத்து சப்பாத்தி குழவியால் உருட்டி மெல்லிய சப்பாத்தியாக இடவும்.
* வெறும் கடாயில் பாதாம்பருப்பை போட்டு வறுத்து பொடியாகி, அதனுடன் கலர் பவுடர், சர்க்கரைத்தூள் சேர்க்கவும்.
* ரோல் செய்த முந்திரி சப்பாத்தியின் மேல் இருக்கும் ஷீட்டை எடுத்துவிட்டு, அதன் மேல் பாதாம் பவுடரைத் தூவி, பாய் போல சுருட்டி, துண்டுகளாக வெட்டு சாப்பிடவும்.
* குழந்தைகளுக்கு பிடித்தமான இந்த முந்திரி - பாதாம் ரோல், சத்தானதாகவும் சுவையாகவும் இருக்கும்.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X