search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    சூப்பரான பாதாம் பர்ஃபி செய்வது எப்படி
    X

    சூப்பரான பாதாம் பர்ஃபி செய்வது எப்படி

    பால் மற்றும் நெய் இல்லாமல் மிகச் சுலபமாக செய்யக்கூடிய இந்த பர்ஃபி, வயதானவர்கள் மற்றும் குழந்தைகளுக்கும் மிகவும் நல்லது.
    தேவையான பொருட்கள் :

    பாதாம் - 1½கப்,
    சர்க்கரை - 1¼ கப்,
    ஏலக்காய் பொடி - ½ டீஸ்பூன்,
    தண்ணீர் - 100 மில்லி,
    குங்குமப்பூ மற்றும் சீவிய பாதாம், பிஸ்தா - மேலே தூவ.

    செய்முறை:

    * பாதாமை சிறிது நேரம் நீரில் ஊற வைத்து தோலை உரித்து கொள்ளவும்.

    * தோல் நீக்கிய பாதாமை வாணலியில் ஈரம் போக லேசாக வறுத்து பொடி செய்துக்கொள்ள வேண்டும்.

    * சர்க்கரையில் தண்ணீர் சேர்த்து நான்ஸ்டிக் வாணலியில் கொதிக்க விட வேண்டும். சர்க்கரை நன்கு கரைந்தவுடன் ஏலக்காய் பொடி சேர்த்து பாதாம் பொடியையும் சேர்த்து நன்கு கலக்க வேண்டும்.

    * பாதாம் கலவை நன்கு கெட்டியாகவும், மென்மையாகவும் சேர்ந்தும் வரும் வரையில் கைவிடால் கிளறி அடுப்பை அணைத்து ஆறவிடவும்.

    * ஆறிய பின் அதை நன்கு வெடிப்புகள் இல்லாமல் பிசைந்துக்கொள்ள வேண்டும்.

    * பிசைந்த மாவு பட்டர் பேப்பர் அல்லது நெய் தடவிய தட்டில் பரப்பி மேலே பாதாம் துண்டுகள் மற்றும் குங்குமப்பூவை தூவி துண்டுகள் போட்டு மேலும் ஆறியவுடன் காற்று புகாத டப்பாவில் வைத்து பரிமாறவும்.

    * இப்போது சூப்பரான பாதாம் பர்ஃபி ரெடி.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×