search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    சுவையான பன்னீர் பால்கோவா உருண்டை
    X

    சுவையான பன்னீர் பால்கோவா உருண்டை

    குழந்தைகளுக்கு மிகவும் விருப்பமான பன்னீர் பால்கோவா உருண்டை செய்வது எப்படி என்பதை கீழே பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பன்னீர்-1 பாக்கெட் (200 கிராம்)
    கோவா-100 கிராம்
    சர்க்கரை- ½ கப்
    தேங்காய் துருவல்-¼ கப்
    வெனிலா எசன்ஸ்-½ கப்

    செய்முறை :

    * தேங்காய் துருவலை லேசாக வெறும் வாணலியில் சூடு செய்துக் கொள்ள வேண்டும்.

    * பன்னீரை மிக்சியில் போட்டு பொடித்துக் (துருவியது போல்) கொள்ள வேண்டும்.

    * சர்க்கரையை மிக்சியில் போட்டு நன்றாக பொடித்துக்கொள்ள வேண்டும்.

    * ஒரே பாத்திரத்தில் தேங்காய் துருவல், பன்னீர் துருவல், கோவா, சர்க்கரை தூள் மற்றும் வெனிலா எசன்ஸ் எல்லாவற்றையும் போட்டு கைப்படாமல் கரண்டியால் நன்கு அழுத்தி கலந்து கொள்ள வேண்டும்.

    * பிறகு கைகளில் லேசாக நெய் தொட்டுக் கொண்டு உருண்டைகளாக அழுத்தி பிடித்து வைக்க வேண்டும்.

    * சுவையான பன்னீர் பால்கோவா உருண்டை ரெடி.

    * குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×