என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
சூப்பரான மீன் குருமா செய்வது எப்படி
Byமாலை மலர்17 Oct 2016 2:32 AM GMT (Updated: 17 Oct 2016 2:32 AM GMT)
மீன் குழம்பு செய்து அலுத்து போனவர்கள் சற்று வித்தியாசமாக மீன் குருமா செய்து சாப்பிடலாம். இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
(வாழை மீன் அல்லது நெத்திலி மீன் மட்டும்)
வாழை மீன் - 3
பொட்டுக் கடலை - 2 டீஸ்பூன்
தேங்காய் - அரை மூடி
பச்சை மிளகாய் - 20 (நீளமாக நறுக்கவும்)
வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கவும்)
நாட்டுத் தக்காளி - 4 (பொடியாக நறுக்கவும்)
இஞ்சி, பூண்டு விழுது - 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
சோம்பு - 1 டீஸ்பூன்
புளிப்பு மாங்காய் - 1
கொத்தமல்லி - ஒரு கையளவு
செய்முறை :
* வாழைமீனை (கழுவி) துண்டு, துண்டாக நறுக்கவும்.
* தேங்காய் சோம்பு, பொட்டு கடலையை மிக்சியில் போட்டு நைசாக அரைத்து கொள்ளவும்.
* மாங்காயை பெரிய துண்டுகளாக வெட்டி கொள்ளவும்.
* கடாயில் எண்ணெய் சூடானதும் விட்டு சோம்பு போட்டு தாளித்த பின் வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு நன்றாக வதக்கவும்.
* வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கி பச்சை வாசனை போனவுடன் தக்காளியை சேர்த்து வதக்கவும்.
* அடுத்து அதில் மஞ்சள் தூளை சேர்த்து அரைத்த தேங்காய் கலவை, சிறிது தண்ணீர் சேர்த்து ஒரு கொதி வந்த பிறகு மீன், மாங்காய் போட்டு நன்றாக கொதி வந்து மீன் வெந்ததும் கடைசியாக கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.
* சுவையான மீன் குருமா ரெடி.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
(வாழை மீன் அல்லது நெத்திலி மீன் மட்டும்)
வாழை மீன் - 3
பொட்டுக் கடலை - 2 டீஸ்பூன்
தேங்காய் - அரை மூடி
பச்சை மிளகாய் - 20 (நீளமாக நறுக்கவும்)
வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கவும்)
நாட்டுத் தக்காளி - 4 (பொடியாக நறுக்கவும்)
இஞ்சி, பூண்டு விழுது - 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
சோம்பு - 1 டீஸ்பூன்
புளிப்பு மாங்காய் - 1
கொத்தமல்லி - ஒரு கையளவு
செய்முறை :
* வாழைமீனை (கழுவி) துண்டு, துண்டாக நறுக்கவும்.
* தேங்காய் சோம்பு, பொட்டு கடலையை மிக்சியில் போட்டு நைசாக அரைத்து கொள்ளவும்.
* மாங்காயை பெரிய துண்டுகளாக வெட்டி கொள்ளவும்.
* கடாயில் எண்ணெய் சூடானதும் விட்டு சோம்பு போட்டு தாளித்த பின் வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு நன்றாக வதக்கவும்.
* வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கி பச்சை வாசனை போனவுடன் தக்காளியை சேர்த்து வதக்கவும்.
* அடுத்து அதில் மஞ்சள் தூளை சேர்த்து அரைத்த தேங்காய் கலவை, சிறிது தண்ணீர் சேர்த்து ஒரு கொதி வந்த பிறகு மீன், மாங்காய் போட்டு நன்றாக கொதி வந்து மீன் வெந்ததும் கடைசியாக கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.
* சுவையான மீன் குருமா ரெடி.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X