search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    தித்திப்பான ரசமலாய் செய்வது எப்படி
    X

    தித்திப்பான ரசமலாய் செய்வது எப்படி

    குழந்தைகளுக்கு ரசமலாய் என்றால் மிகவும் பிடிக்கும். வீட்டிலேயே எளிய முறையில் இதனை செய்யலாம்.
    தேவையான பொருட்கள் :

    பால் - 3 லிட்டர்
    சர்க்கரை - 3 கப்
    தண்ணீர் - 4 கப்
    குங்குமப் பூ - சிறிது
    ஏலக்காய் பொடி - 2 சிட்டிகை
    எலுமிச்சை சாறு - 2 ஸ்பூன்
    பாதாம், முந்திரி, பிஸ்தா - 3 டேபிஸ் ஸ்பூன்

    செய்முறை :

    * பாதாம், பிஸ்தா, முந்திரி முதலியவற்றை சிறு சிறு துண்டுகளாக உடைத்துக் கொள்ளவும்.

    * 1 லிட்டர் பாலைக் கொதிக்க வைத்து அரை லிட்டர் அளவுக்கு சுண்ட வைக்கவும்.

    * அந்த பாலில் 1 கப் சர்க்கரை, குங்குமப் பூ, பாதாம், பிஸ்தா, முந்திரி, ஏலக்காய் பொடி சேர்த்து கொதிக்க விட வேண்டும். சர்க்கரை கரைந்ததும் 5 நிமிடம் கழித்து அடுப்பை அணைத்து விடவும்.

    * மீதியுள்ள 2 லிட்டர் பாலை கொதிக்க வைத்து கொதிக்கும் போது எலுமிச்சை சாறு சேர்க்கவும். எலுமிச்சை சாறு கலந்தவுடன் பால் திரிந்து விடும். திரிந்த பாலை ஒரு காட்டன் துணியில் மூட்டை கட்டி தண்ணீர் வடியும் படி வைக்கவும்.

    * தண்ணீர் எல்லாம் நன்றாக வடிந்த பின் அந்த மூட்டையில் உள்ள கலவையை ஒரு தட்டில் கொட்டி உள்ளங்கையால் மென்மையாக அழுத்தி பிசையவும்.
     
    * பின்னர் அந்த மாவை சிறு சிறு வடை போல தட்டிக் கொள்ளவும்.

    * அடிகனமாக பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் மீதியுள்ள 2 கப் சர்க்கரையை தண்ணீருடன் சேர்த்து கொதிக்க விட வேண்டும்.

    * கொதிக்கும் போது வடை போல் தட்டி வைத்திருக்கும் பன்னீரை சர்க்கரைப் பாகில் போட வேண்டும். அடுப்பை மிதமான தீயில்வைக்க வேண்டும். அரை மணி நேரத்தில் போட்ட வடைகள் உப்பி, பெரிதாகி விடும்.

    * இப்போது இந்த வடைகளை ஏற்கனவே தயார் செய்து வைத்துள்ள பாலில் போட வேண்டும்.

    * ஃப்ரிட்ஜில் வைத்து ஜில்லென்று பரிமாறவும்.

    * தித்திப்பான ரசமலாய் ரெடி.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×