search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    குழந்தைகளுக்கு விருப்பமான பன்னீர் கட்லெட்
    X

    குழந்தைகளுக்கு விருப்பமான பன்னீர் கட்லெட்

    குழந்தைகளுக்கு மாலை நேரத்தில் பன்னீர் கட்லெட் செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். அதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பன்னீர் - 500 கிராம்
    மஞ்சள்தூள் - 1 தேக்கரண்டி
    உப்பு - தேவையான அளவு
    வெங்காயம் - 4
    பச்சை மிளகாய் - 7
    கறிவேப்பிலை - 2 கொத்து
    பூண்டு - 1 ½மேஜைக்கரண்டி
    இஞ்சி - 1 ½மேஜைக்கரண்டி
    சோம்பு தூள் - 1 தேக்கரண்டி
    கரமசாலா தூள் - 1½ மேஜைக்கரண்டி
    மிளகு தூள் - 1 தேக்கரண்டி
    உருளைக்கிழங்கு - 3

    பொரிக்க :

    சோள மாவு - 4 மேஜைக்கரண்டி
    உப்பு - தேவையான அளவு
    பிரட் தூள் - 1½ கப்
    எண்ணெய் - பொரிக்க

    செய்முறை :

    * பச்சை மிளகாய், வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும். 

    * பூண்டு, இஞ்சியை நன்கு நசுக்கி எடுத்துக் கொள்ளவும்.

    * உருளைக்கிழங்கை நன்றாக வேகவைத்து தோல் உரித்து மசித்து கொள்ளவும்.

    * பன்னீரை துருவிக்கொள்ளவும்.

    * பின்பு கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் கறிவேப்பிலை போட்டு தாளித்த பின் வெங்காயம், பச்சை மிளகாய், சிறிது உப்பு சேர்த்து வதக்கவும்.

    * வெங்காயம் லேசாக பொன்னிறமாளதும் இஞ்சி, பூண்டு கலவையை சேர்க்கவும்.

    * அவை நன்கு வதங்கியதும் சோம்பு, கரம் மசாலா, மிளகு தூள் சேர்த்து வதக்கவும்.

    * அடுத்து துருவிய பன்னீரை சேர்த்து 5 நிமிடம் வேக வைக்கவும். 

    * அடுத்து அதனுடன் மசித்த உருளைக்கிழங்கை சேர்த்து நன்றாக கிளறவும். பின்பு தீயை அணைத்து அதனை ஆற வைக்கவும்.

    * ஆறிய மசாலாவை நன்றாக கலந்து வேண்டிய வடிவில் பிடித்து வைக்கவும்.

    * ஒரு கப்பில் சோள மாவுடன் சிறிது நீர் சேர்த்து கலக்கவும்.

    * ஒரு தட்டில் பிரட் தூளை பரப்பி வைக்கவும்.

    * கட்லெட்களை சோள மாவுக் கலவையில் முக்கி பின்பு பிரட் தூளில் போட்டு பிரட்டி எடுத்து அதனை எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.

    * பன்னீர் கட்லெட் ரெடி.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

    Next Story
    ×