என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
நெத்திலி மீன் குழம்பு செய்வது எப்படி
Byமாலை மலர்11 July 2016 5:24 AM GMT (Updated: 11 July 2016 5:24 AM GMT)
நெத்திலி மீன் குழம்பு செய்வது மிகவும் சுலபமானது. மிகவும் சுவையாக இருக்கும். இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
நெத்திலி மீன் - 1/2 கிலோ
சிறிய வெங்காயம் - 150 கிராம்
தக்காளி - 100 கிராம்
மிளகாய்தூள் - 1 டேபிள் ஸ்பூன்
தனியாதூள் - 1 1/2 டேபிள் ஸ்பூன்
பச்சை மிளகாய் - 3
இஞ்சி - 1 சிறிய துண்டு
பூண்டு - 10 பல்
தேங்காய் பால் - அரை டம்ளர்
வெந்தயம் - 1 டீஸ்பூன்
கொத்தமல்லி தழை - 1 சிறிதளவு
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
சோம்பு - 1 டீஸ்பூன்
புளி - எலுமிச்சை அளவு
செய்முறை :
* மீனை சுத்தம் செய்து லேசாக உப்பு, மஞ்சள் தூவி கிளறி 20 நிமிடம் ஊற வைக்கவும்.
* வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி வைக்கவும்.
* புளியை கரைத்து வைக்கவும்.
* இஞ்சியை விழுதாக அரைக்கவும்.
* வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் வெந்தயம், சோம்பு தாளித்த பினி நறுக்கிய வெங்காயம், பூண்டு, இஞ்சி விழுது சேர்த்து நன்கு வதக்கிய பின் தக்காளி, பச்சை மிளகாயை சேர்த்து நன்றாக வதக்கவும்.
* தக்காளி நன்றாக வதங்கிய பின கரைத்த புளியை ஊற்றவும்.
* அடுத்து அதில் உப்பு, மஞ்சள், மிளகாய், தனியா தூள்களை சேர்த்து எண்ணெய் பிரியும் வரை கொதிக்க விடவும்.
* அடுத்து தேங்காய் பாலை சேர்த்து கொஞ்ச நேரம் கொதிக்க விட்டு மீனை சேர்க்கவும்.
* மீனை சேர்த்த உடன் அடுப்பை மிதமான தீயில் வைக்கவும். மீன் 2 அல்லது 3 கொதியில் வெந்து விடும். குழம்பை இறக்கும் முன் ஒரு சிறிய வெங்காயத்தை தோலுடன் அதில் தட்டி போட்டு அடுப்பில் இருந்து இறக்கவும். கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்.
* நெத்திலி மீன் குழம்பு ரெடி.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
நெத்திலி மீன் - 1/2 கிலோ
சிறிய வெங்காயம் - 150 கிராம்
தக்காளி - 100 கிராம்
மிளகாய்தூள் - 1 டேபிள் ஸ்பூன்
தனியாதூள் - 1 1/2 டேபிள் ஸ்பூன்
பச்சை மிளகாய் - 3
இஞ்சி - 1 சிறிய துண்டு
பூண்டு - 10 பல்
தேங்காய் பால் - அரை டம்ளர்
வெந்தயம் - 1 டீஸ்பூன்
கொத்தமல்லி தழை - 1 சிறிதளவு
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
சோம்பு - 1 டீஸ்பூன்
புளி - எலுமிச்சை அளவு
செய்முறை :
* மீனை சுத்தம் செய்து லேசாக உப்பு, மஞ்சள் தூவி கிளறி 20 நிமிடம் ஊற வைக்கவும்.
* வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி வைக்கவும்.
* புளியை கரைத்து வைக்கவும்.
* இஞ்சியை விழுதாக அரைக்கவும்.
* வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் வெந்தயம், சோம்பு தாளித்த பினி நறுக்கிய வெங்காயம், பூண்டு, இஞ்சி விழுது சேர்த்து நன்கு வதக்கிய பின் தக்காளி, பச்சை மிளகாயை சேர்த்து நன்றாக வதக்கவும்.
* தக்காளி நன்றாக வதங்கிய பின கரைத்த புளியை ஊற்றவும்.
* அடுத்து அதில் உப்பு, மஞ்சள், மிளகாய், தனியா தூள்களை சேர்த்து எண்ணெய் பிரியும் வரை கொதிக்க விடவும்.
* அடுத்து தேங்காய் பாலை சேர்த்து கொஞ்ச நேரம் கொதிக்க விட்டு மீனை சேர்க்கவும்.
* மீனை சேர்த்த உடன் அடுப்பை மிதமான தீயில் வைக்கவும். மீன் 2 அல்லது 3 கொதியில் வெந்து விடும். குழம்பை இறக்கும் முன் ஒரு சிறிய வெங்காயத்தை தோலுடன் அதில் தட்டி போட்டு அடுப்பில் இருந்து இறக்கவும். கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்.
* நெத்திலி மீன் குழம்பு ரெடி.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X