search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    நெத்திலி மீன் குழம்பு செய்வது எப்படி
    X

    நெத்திலி மீன் குழம்பு செய்வது எப்படி

    நெத்திலி மீன் குழம்பு செய்வது மிகவும் சுலபமானது. மிகவும் சுவையாக இருக்கும். இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    நெத்திலி மீன் - 1/2 கிலோ
    சிறிய வெங்காயம் - 150 கிராம்
    தக்காளி - 100 கிராம்
    மிளகாய்தூள் - 1 டேபிள் ஸ்பூன்
    தனியாதூள் - 1 1/2 டேபிள் ஸ்பூன்
    பச்சை மிளகாய் - 3
    இஞ்சி - 1 சிறிய துண்டு
    பூண்டு - 10 பல்
    தேங்காய் பால் - அரை டம்ளர்
    வெந்தயம் - 1 டீஸ்பூன்
    கொத்தமல்லி தழை - 1 சிறிதளவு
    எண்ணெய் - தேவையான அளவு
    உப்பு - தேவையான அளவு
    சோம்பு - 1 டீஸ்பூன்
    புளி - எலுமிச்சை அளவு

    செய்முறை :

    * மீனை சுத்தம் செய்து லேசாக உப்பு, மஞ்சள் தூவி கிளறி 20 நிமிடம் ஊற வைக்கவும்.

    * வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி வைக்கவும்.

    * புளியை கரைத்து வைக்கவும்.

    * இஞ்சியை விழுதாக அரைக்கவும்.



    * வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் வெந்தயம், சோம்பு தாளித்த பினி நறுக்கிய வெங்காயம், பூண்டு, இஞ்சி விழுது சேர்த்து நன்கு வதக்கிய பின் தக்காளி, பச்சை மிளகாயை சேர்த்து நன்றாக வதக்கவும்.



    * தக்காளி நன்றாக வதங்கிய பின கரைத்த புளியை ஊற்றவும்.

    * அடுத்து அதில் உப்பு, மஞ்சள், மிளகாய், தனியா தூள்களை சேர்த்து எண்ணெய் பிரியும் வரை கொதிக்க விடவும்.



    * அடுத்து தேங்காய் பாலை சேர்த்து கொஞ்ச நேரம் கொதிக்க விட்டு மீனை சேர்க்கவும்.



    * மீனை சேர்த்த உடன் அடுப்பை மிதமான தீயில் வைக்கவும். மீன் 2 அல்லது 3 கொதியில் வெந்து விடும். குழம்பை இறக்கும் முன் ஒரு சிறிய வெங்காயத்தை தோலுடன் அதில் தட்டி போட்டு அடுப்பில் இருந்து இறக்கவும். கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்.



    * நெத்திலி மீன் குழம்பு ரெடி.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×