search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    பருப்பு உருண்டை குழம்பு செய்வது எப்படி
    X

    பருப்பு உருண்டை குழம்பு செய்வது எப்படி

    பருப்பு உருண்டை குழம்பு மிகவும் சுவையாக இருக்கும். இப்போது பருப்பு உருண்டை குழம்பு எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
    தேவையான பொருள்கள் :

    உருண்டைக்கு :

    கடலை பருப்பு - 1 கப்
    சோம்பு - 1 டீஸ்பூன்
    காய்ந்த மிளகாய் - 3
    கறிவேப்பிலை - 1 கொத்து
    பெருங்காயம் - 1/4 டீஸ்பூன்
    பெரிய வெங்காயம் - 2
    உப்பு - தேவையான அளவு
     
    குழம்புக்கு :

    சின்ன வெங்காயம் - 15
    தக்காளி - 2
    தேங்காய் துருவல் - 1/2 கப்
    சோம்பு - 1/2 டீஸ்பூன்
    சாம்பார் தூள் / (மிளகாய் தூள்+மல்லிதூள்) - 1 டேபிள் ஸ்பூன்
    கடுகு - 1/2 டி ஸ்பூன்
    வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
    பூண்டு - 5 பல்
    கறிவேப்பிலை - 1 கொத்து
    புளி - நெல்லிக்காய் அளவு
     
    செய்முறை :

    * சின்ன வெங்காயம், பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * கடலை பருப்பை நன்றாக கழுவி இரண்டு மணி நேரம் ஊறவைத்து நன்றாக ஊறிய பிறகு அதில் காய்ந்த மிளகாய், சோம்பு, பெருங்காயம், கறிவேப்பிலை, உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்(நெய்சாக அரைக்க கூடாது இல்லை என்றால் உருண்டை இருகி விடும்).

    * பெரிய வெங்காயத்தை(பாதி) பொடியாக நறுக்கி அரைத்த மாவுடன் சேர்த்து உருண்டையாக தட்டவும்.

    * கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி சின்ன வெங்காயத்தை சிவக்க வதக்கிய பிறகு அதில் தக்காளி ஒன்றையும் சேர்த்து நன்றாக வதக்கி ஆற விடவும்.

    * நன்றாக ஆறியவுடன் சோம்பு, தேங்காய் துருவல் சேர்த்து மிக்ஸ்யில் அரைக்கவும்.

    * அரைத்த கலவையை புளி தண்ணீரில் சேர்த்து கலந்து கொள்ளவும்.

    * மற்றொரு கடாயில் சிறிது நல்லெண்ணெய் ஊற்றி கடுகு, வெந்தயம், கறிவேப்பிலை போட்டு தாளித்த பின் பூண்டு, மீதியுள்ள வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும்.

    * பிறகு சாம்பார் தூளையும் சேர்த்து வதக்கவும் (சாம்பார் தூளுக்கு பதில் மிளகாயும், மல்லி தூளும் சேர்க்கலாம்) குழம்புக்கு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.

    * குழம்பில் எண்ணெய் பிரிந்து வந்ததும் அடுப்பை மிதமான தீயில் வைத்து உருட்டி வைத்துள்ள உருண்டையை ஒன்றின் பின் ஒன்றாக போடவும். உருண்டை முக்கால் பதம் வெந்ததும் கரைத்து வைத்திற்கும் மசாலா புளிக்கலவையை சேர்க்கவும். உருண்டைகளை திருப்பி விட்டு மேலும் 5 நிமிடம் வேகவைத்து அடுப்பை அணைக்கவும்.

    * கொத்தமல்லி தழை சேர்த்து பரிமாறவும்.

    * இந்த குழம்பு சாதம், இட்லி, தோசை, சப்பாத்தி, இடியாப்பம் எல்லாவற்றிற்கும் பொருத்தமாக இருக்கும். 

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×