search icon
என் மலர்tooltip icon

    கிச்சன் கில்லாடிகள்

    ‘இயற்கை ஜெல்லி’ என்று அழைக்கப்படும் நுங்கு, உடலை குளிர்ச்சியாக வைத்திருப்பதற்கு உதவும். நுங்கு வைத்து அருமையான பாயாசம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையானப் பொருட்கள்:

    நுங்கு - 5
    பால் - ½ லிட்டர்
    சர்க்கரை - 75 கிராம்
    ஏலக்காய் - 3
    குங்குமப்பூ - 2 சிட்டிகை

    செய்முறை:

    நுங்கின் மேல் தோலை நீக்கி சிறுசிறு துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

    ஊற வைத்துத் தோல் உரித்த பாதாம், ஏலக்காய் மற்றும் சிறிது பால் சேர்த்து மிக்சியில் போட்டு நன்றாக அரைத்துக்கொள்ளவும்.

    காய்ச்சிய பாலை அடுப்பில் வைத்து, அதில் சர்க்கரை மற்றும் பாதாம் கலவையைக் கலந்து சற்று கெட்டியாகும் வரை காய்ச்சி ஆற வைக்கவும்.

    பின்பு அதில் நுங்குத் துண்டுகளைச் சேர்த்து குளிர்சாதனப் பெட்டியில் வைத்து குளிரச்செய்து, குங்குமப்பூவைத் தூவி சில்லெனப் பரிமாறவும்.

    இப்போது அருமையான நுங்கு பாயாசம் ரெடி.
    நிறைய பேருக்கு மோர் குழம்பை பக்குவமாக வைக்க தெரியாது. இன்று பக்குவமாக பத்தே நிமிடத்தில் மோர் குழம்பு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    தயிர் - 1 கப்
    உப்பு - தேவையான அளவு
    வெண்டைக்காய் - 3

    அரைக்க

    தேங்காய் - கால் கப்
    மஞ்சள் பொடி - 1/2 டீஸ்பூன்
    சீரகம் - 1/2 டீஸ்பூன்
    இஞ்சி - 1/2 துண்டு
    பூண்டு - 3
    காய்ந்த மிளகாய் - 4
    பெருங்காயத்தூள் - 1 சிட்டிகை

    தாளிக்க

    கடுகு - 1/2 டீஸ்பூன்
    எண்ணெய் - 1 டீஸ்பூன்
    கருவேப்பிலை - சிறிதளவு
    காய்ந்த மிளகாய் - 1

    செய்முறை :

    வெண்டைக்காயை சிறிய துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

    வெண்டைக்காயை உப்பு போட்டு எண்ணெயில் போட்டு வதக்கி தனியாக வைத்துக்கொள்ளுங்கள்.

    அரைக்கக் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சேர்த்து மைய அரைத்துக்கொள்ளுங்கள்.

    தயிரில் உப்பு போட்டு நன்கு அடித்துக்கொள்ளுங்கள்.

    பின் அரைத்த விழுது சேர்த்து கலந்துவிட்டு அதில் அரை கப் தண்ணீர் ஊற்றி கலந்துகொள்ளுங்கள்.

    தாளிக்கக் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சேர்த்து தாளித்த பின்னர் அதோடு வதக்கிய வெண்டைக்காயையும் போட்டு ஒரு பிரட்டு பிரட்டி எடுங்கள்.

    பின் அதை தயிரில் சேர்த்து கலந்துவிடுங்கள்.

    பின் அதை அப்படியே அடுப்பில் வைத்து கொதிக்க நுரை கிளம்பும்போது அடுப்பை அணைத்துவிடுங்கள் அல்லது கொதிக்க வைக்காமல் அப்படியேவும் சாப்பிடலாம்.

    அவ்வளவுதான் வெண்டைக்காய் மோர் குழம்பு தயார்.
    இந்த ஸ்நாக்ஸ் செய்வது மிகவும் சுலபம். இந்த ஸ்நாக்ஸ் 10, 15 நாட்கள் வரை கெட்டு போகாது. இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    கடலை மாவு - 2 கப்,
    அரிசி மாவு - ஒரு கப்,
    சோள மாவு - 2 டேபிள்ஸ்பூன்,
    கருப்பு எள் - ஒரு டீஸ்பூன்,
    கரம் மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன்,
    ஆம்சூர் பொடி (மாங்காய்த்தூள்) - ஒரு டீஸ்பூன்,
    புளித் தண்ணீர் - கால் கப்,
    கொப்பரைத் துருவல் - அரை கப்,
    வெள்ளை எள் - 2 டேபிள்ஸ்பூன்,
    கசகசா - ஒரு டீஸ்பூன்,
    சர்க்கரை, உப்பு - சிறிதளவு,
    எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு,

    செய்முறை:

    கொப்பரைத் துருவல், வெள்ளை எள், கசகசா ஆகியவற்றை தனித்தனியாக வறுத்து ஒன்றுசேர்த்துப் பொடிக்கவும்.

    கடலை மாவு, அரிசி மாவு, சோள மாவு மூன்றையும் சலித்து… உப்பு, சர்க்கரை, கருப்பு எள், கரம் மசாலாத்தூள், ஆம்சூர் பொடி, எண்ணெய் சேர்த்துப் பிசைந்து, பூரிக்கு இடுவது போல் இட்டு வைக்கவும்.

    அதன் மேல் புளித் தண்ணீரை தடவவும்.

    நடுவில் வறுத்துப் பொடித்து வைத்த பொடியை வைக்கவும்.

    இதை பாய் மடிப்பது மாதிரி சுருட்டி, இருபுறமும் ஓரங்களை வெட்டி, ஸ்லைஸ் போட்டு…. எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

    இப்போது சூப்பரான பாக்கர் வாடி ரெடி.

    இதை காற்று புகாத கண்ணாடி டப்பாவில் போட்டு 10, 15 நாட்கள் பயன்படுத்தலாம்.
    பல்வேறு காய்கறிகளை வைத்து செய்யும் இந்த கதம்ப சாதம் சூப்பராக இருக்கும். சைடிஷ் எதுவும் தேவையில்லை. இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பச்சரிசி - 1 கப்,
    துவரம்பருப்பு - 1/2 கப்,
    உப்பு - தேவைக்கு,
    மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்,
    திக்கான புளிக்கரைசல் - 1/2 கப்,
    பூசணித்துண்டுகள் - 1/4 கப்,
    மஞ்சள் பூசணித் துண்டுகள் - 1/4 கப்,
    கத்தரிக்காய் துண்டுகள் - 1/4 கப்,
    வாழைக்காய் துண்டுகள் - 1/4 கப், (மற்றபடி விருப்பப்பட்ட நாட்டுக்காய்கள்),
    ஊற வைத்து வேக வைத்த கருப்பு கொண்டைக்கடலை, வேர்க்கடலை இரண்டும் சேர்ந்தது - 1/4 கப்,
    வெல்லம் துருவியது - 1 டேபிள் ஸ்பூன்.

    வறுத்துப் பொடிக்க:

    எண்ணெய் - 1 டீஸ்பூன்,
    கடலைப்பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்,
    தனியா - 2 டேபிள் ஸ்பூன்,
    வரமிளகாய் - 6,
    தேங்காய்த்துருவல் - 8 டேபிள் ஸ்பூன்.

    தாளிக்க:

    நல்லெண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்,
    கடுகு - 1 டேபிள் ஸ்பூன்,
    கறிவேப்பிலை - 1 கொத்து,
    பெருங்காயம் - 1/2 டீஸ்பூன்.

    செய்முறை :

    பச்சரிசி, துவரம்பருப்பு இரண்டையும் 3 கப் நீர் விட்டு குழைய வேக விட்டு வைக்கவும்.

    வாணலியில் 1 டீஸ்பூன் எண்ணெய் விட்டு வறுக்கக் கொடுத்த பொருட்களை வறுத்து மிக்ஸியில் கொர கொரப்பாகப் பொடிக்கவும்.

    ஒரு அடி கனமான பாத்திரத்தில் புளிக்கரைசலை ஊற்றி மேலும் ஒரு கப் நீர் ஊற்றி உப்பு, மஞ்சள் பொடி மற்றும் நறுக்கிய காய்கறிகளைப் போட்டு வேக விடவும்.

    காய்கள் முக்கால் பதம் வெந்ததும் ஊற வைத்து வேக வைத்த கடலைகளைச் சேர்த்து பொடித்து வைத்துள்ள பொடியினையும் சேர்த்து மேலும் கொதிக்க விட்டு வெல்லம் சேர்த்து காய்கள் வெந்ததும் வெந்த அரிசி, பருப்பினைச் சேர்த்துக் கலக்கவும்.

    அடுத்து தாளிக்கக் கொடுத்தவற்றைத் தாளித்துச் சேர்த்து இறக்கவும்.

    இப்போது சூப்பரான கதம்ப சாதம் தயார்.
    இந்த சீசனில் கிடைக்கும் மாம்பழத்தை வைத்து அருமையான ரெசிபிகளை செய்யலாம். அந்த வகையில் இன்று மாம்பழ பாயாசம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    தித்திப்பான மாம்பழக் கூழ் - ஒரு கப்,
    சர்க்கரை - அரை கப்,
    பால் - ஒரு லிட்டர்,
    அரிசிக்குருணை - 2 டேபிள்ஸ்பூன்,
    கேசரி பவுடர் - ஒரு சிட்டிகை,
    நெய் - ஒரு டேபிள்ஸ்பூன்,
    முந்திரி, திராட்சை - தலா ஒரு டேபிள்ஸ்பூன்,
    கண்டென்ஸ்டு மில்க் - 2 டேபிள்ஸ்பூன்,
    மேங்கோ எசன்ஸ் (விரும்பினால்) - சில துளிகள்,
    ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன்.

    செய்முறை:

    முந்திரி, திராட்சையை நெய்யில் சிவக்க வறுத்து எடுக்கவும்.

    மீதமுள்ள நெய்யை விட்டு அரிசிக் குருணையைப் போட்டு லேசாக வறுத்து, அதில் பாலை ஊற்றி காய்ச்சவும்.

    அரிசி நன்றாக வெந்து கண்ணாடி போல் ஆகி பால் சிறிது வற்றியதும், கண்டென்ஸ்டு மில்க், சர்க்கரை சேர்த்துக் கிளறவும்.

    பிறகு கேசரி பவுடர், ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கிளறி, மாம்பழக் கூழையும் சேர்க்கவும்.

    எல்லாம் சேர்ந்து கொதித்ததும் கீழே இறக்கி, முந்திரி - திராட்சை, மேங்கோ எஸன்ஸ் சேர்த்துப் பரிமாறவும்.

    இப்போது சூப்பரான மாம்பழ பாயாசம் ரெடி.
    சீசனில் கிடைக்கும் மாங்காயில் பல்வேறு சுவையான ரெசிபிகளை செய்யலாம். இந்த வகையில் இன்று மாங்காய் வற்றல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    நல்ல புளிப்பான, சதைப்பற்றுள்ள மாங்காய் - 20,
    மஞ்சள்தூள் - 2 டீஸ்பூன்,
    பொடி உப்பு - 200 கிராம்.

    செய்முறை:

    மாங்காய்களைக் கழுவி துடைத்து நிழலில் காயவிடவும்.

    இதை துண்டுகள் செய்து உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து இரண்டு நாள் குலுக்கிக் கொள்ளவும்.

    மூன்றாம் நாள் உப்பு நீரை வடித்து, மாங்காயை பெரிய தட்டுகளில் போட்டு வெயிலில் காயவிடவும்.

    பிறகு, மீண்டும் அதே உப்பு நீரில் போட்டு, நீரை வடித்து காயவிடவும்.

    இப்படி ஒரு வாரம் காயவிட்டு தண்ணீர் முழுவதும் வற்றி மாங்காய் சுக்கு போல் ஆனதும், ஒரு எவர்சில்வர் டப்பா அல்லது பானையில் போட்டு வைக்கவும்.

    இது சீக்கிரம் கெட்டுப்போகாது.
    ஆந்திர மாநிலத்தின் பாரம்பரிய உணவுகள் காரத்திற்கும், ருசிக்கும் பெயர் பெற்றவை. அசத்தலான ருசியுடன் கூடிய ஆந்திர ஸ்டைல் சிக்கன் வறுவல் எவ்வாறு தயாரிப்பது என்று பார்ப்போம்.
    மசாலா தயாரிக்க தேவையான பொருட்கள்:

    தனியா - 1½ தேக்கரண்டி
    சீரகம் - 1 தேக்கரண்டி
    சோம்பு -1 தேக்கரண்டி
    மிளகு - 1 தேக்கரண்டி
    ஏலக்காய் - 3
    கிராம்பு - 4
    பட்டை - சிறிய துண்டு
    காய்ந்த மிளகாய் - 6
    காஷ்மீரி மிளகாய் - 4

    செய்முறை:

    வாணலியில் பட்டை, கிராம்பு, ஏலக்காய், தனியா, சீரகம், சோம்பு, மிளகு, காய்ந்த மிளகாய், காஷ்மீரி மிளகாய் ஆகியவற்றை போட்டு, எண்ணெய் ஊற்றாமல் இரண்டு நிமிடம் மிதமான தீயில் வறுத்தெடுக்க வேண்டும். பின்னர் அதை ஆற வைத்து பொடியாக அரைத்துக் கொள்ளவும்.

    வறுவலுக்குத் தேவையான பொருட்கள்:

    கோழிக்கறி - 1 கிலோ
    பெரிய வெங்காயம் - 4
    பச்சை மிளகாய் - 2
    கறிவேப்பிலை - தேவையான அளவு
    இஞ்சி பூண்டு விழுது - இரண்டு தேக்கரண்டி
    உப்பு - தேவையான அளவு
    மஞ்சள் தூள் - ½ தேக்கரண்டி
    மிளகாய்த்தூள் - 4 தேக்கரண்டி
    எண்ணெய் - தேவையான அளவு

    செய்முறை:

    கோழிக்கறியை மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், சிறிதளவு உப்பு கலந்து அரை மணி நேரம் ஊற வைக்கவும்.

    பெரிய வெங்காயத்தை பொடிதாக நறுக்கிக் கொள்ளவும்.

    வாணலியில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி, சூடானதும் நறுக்கி வைத்துள்ள பெரிய வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக மாறும் வரை வதக்கவும்.

    பின்பு பச்சை மிளகாயை இரண்டாக வெட்டி அதில் சேர்த்துக் கிளறவும்.

    அதன் பின்னர் இஞ்சி பூண்டு விழுது போட்டு, பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பின்பு அதில் கறிவேப்பிலை சேர்க்கவும்.

    சிறிது நேரம் கழித்து அந்தக் கலவையில் ஊற வைத்த கோழிக்கறியை சேர்த்து வதக்கவும்.

    பின்னர் அதனுடன் அரைத்து வைத்துள்ள மசாலாப் பொடி இரண்டு தேக்கரண்டி சேர்த்துக் கலக்கவும். கலவையில் தண்ணீர் சேர்க்கத் தேவையில்லை,

    கோழிக்கறியில் ஏற்கனவே உப்பு போட்டு ஊற வைத்திருப்பதால், சுவைத்துப் பார்த்து உப்பு சேர்த்துக் கொள்ளவும்.

    கலவையில் இருந்து எண்ணெய் பிரிந்து மேலே வரும் பக்குவத்தில் சிறிது கறிவேப்பிலை போட்டு கிளறி இறக்கவும்.

    ருசியான ஆந்திரா சிக்கன் வறுவல் தயார்.
    பாதாம் பூரி இந்தியாவின் பல இடங்களில் பண்டிகைகளின் போது விருப்பமாக செய்யப்படுகிறது. இன்று இந்த பூரியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    மைதா மாவு - 1 கப்
    சர்க்கரை - 3/4 கப்
    உருக்கிய நெய் - 1/4 கப்
    உலர்ந்த தேங்காய் துருவல் - 1/2 கப்
    எண்ணெய் - பொரிப்பதற்கு
    அரிசி மாவு - 2 டேபிள் ஸ்பூன்
    தண்ணீர் - 1 கப்
    உப்பு - சுவைக்கேற்ப
    ஏலக்காய் பொடி - 1 டேபிள் ஸ்பூன்
    கிராம்பு - 8-10

    செய்முறை

    ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, அரிசி மாவு, உப்பு, நெய் எல்லாவற்றையும் சேர்த்து நன்றாக பிசையுங்கள்.

    கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து மாவை மென்மையாக பிசைந்து வைத்துக் கொள்ளுங்கள். அதை அப்படியே 10 நிமிடங்கள் வைத்து விடுங்கள்.

    ஒரு கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் சர்க்கரையை சேர்த்து தண்ணீர் ஊற்றவும். நன்றாக அதை கலந்து சர்க்கரை முழுவதும் கரையும் வரை காத்திருக்க வேண்டும்.

    அதனுடன் ஏலக்காய் தூள் சேர்த்து சர்க்கரை சிரப்பை இறக்கி தனியாக வைத்து விடவும்.

    இப்பொழுது பிசைந்த மாவை கொஞ்சமாக எடுத்து சின்ன சின்ன பந்து மாதிரி உருட்டி பூரில் போல் தேய்த்து பூரியை முக்கோண வடிவில் எல்லா பக்கங்களையும் கவனமாக மூட வேண்டும். (சமோசா செய்வது மாதிரி).

    கடாயில் எண்ணெயை சூடானதும் ஒவ்வொரு பூரியாக போட்டு பொன்னிறமாக மாறும் வரை பொரிக்க வேண்டும்.

    பொரித்து சுடச்சுட உள்ள பூரியை சர்க்கரை பாகில் நனைத்து அப்படியே தட்டில் வைத்து பரிமாறவும்.

    அதன் மேல் துருவிய தேங்காயை தூவி அப்படியே சுவையுடன் அழகாக சாப்பிடலாம்.
    குழந்தைகள் முதல் பெரியோர் வரை அனைவரும் விரும்பும் இந்த ரெசிபியை செய்வது மிகவும் சுலபம். இன்று இந்த செசிபி செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    முந்திரி - 10 பருப்புகள் (2 மணி நேரம் ஊறவைக்கவும்)
    பாதாம் பருப்பு - 10 (வெந்நீரில் ஊற வைத்துத் தோலுரிக்கவும்)
    தேங்காய்த் துருவல் - 1/4 கப் (விழுதாக அரைக்கவும்)
    சர்க்கரை - 1 1/2 கப்
    நெய் - 1/2 கப்
    கிஸ்மிஸ் - விருப்பத்திற்கேற்ப

    செய்முறை

    தண்ணிரில் ஊறிய பாதாம் மற்றும் முந்திரியை மிக்ஸியில் போட்டு நைஸாக அரைத்துக் கொள்ளுங்கள்.

    அரைத்த முந்திரி, பாதாம் கலவையை ஒரு பாத்திரத்தில் போட்டு, தேங்காய் விழுதையும் சேர்த்து, சர்க்கரை சேர்த்து கிளறிக் கொண்டிருங்கள்.

    கலவை கெட்டியாகி இறுகி வரும் போது உருக்கிய நெய்யை அதில் ஊற்றிக் கிளறுங்கள்.

    பிறகு கிஸ்மிஸ் பழங்கள் சேர்த்து அல்வா பதம் வந்தவுடன் இறக்கி, பாத்திரத்தில் எடுத்து வைத்துப் பரிமாறவும்.

    இப்போது சூப்பரான தேங்காய் அல்வா ரெடி.
    வித்தியாசமான சுவையில் இருக்கும் இந்த ஆரஞ்சு பர்ஃபி எளிய முறையில் வீட்டிலேயே செய்வது எப்படி என்று பார்க்கலாம் வாங்க...
    தேவையான பொருட்கள்:

    ஆரஞ்சு பழங்கள் - 4
    சர்க்கரை சேர்க்காத கோவா - 400 கிராம்
    சர்க்கரை - 400 கிராம்
    முந்திரி, பாதாம் (பொடிதாக நறுக்கியது) - 2 டேபிள் ஸ்பூன்
    ஏலக்காய்த்தூள் - 1 டீஸ்பூன்
    நெய் - 1 டேபிள் ஸ்பூன்

    செய்முறை:

    ஆரஞ்சு பழங்களை உரித்து, மேல் தோல் மற்றும் விதைகளை நீக்கி, சுளைகளை தனியாக எடுத்து வைக்கவும்.

    கோவாவை மிக்சியில் போட்டு பொடியாக அரைத்துக்கொள்ளவும்.

    அரைத்த கோவாவை அடிப்பக்கம் கனமான பாத்திரத்தில் கொட்டி அதில் சர்க்கரையை சேர்த்து கலக்கவும்.

    இந்தக் கலவையை அடுப்பில் வைத்து, மிதமான தீயில் கலவை கெட்டியான பதத்துக்கு வரும் வரை கிளறவும்.

    பின்பு அதில் ஆரஞ்சு சுளைகளைக் கொட்டிக் கிளறவும்.

    இப்போது கலவை சற்றே நீர்த்து போகும். அது மீண்டும் கெட்டியாகும் வரை தொடர்ந்து கிளறவும்.

    கெட்டியான பதத்துக்கு வரும்போது, அதில் நெய், ஏலக்காய்த்தூள், முந்திரி, பாதாம் சேர்த்து நன்றாகக் கிளறவும். இரண்டு நிமிடம் கழித்து அடுப்பில் இருந்து இறக்கவும்.

    நெய் தடவிய தட்டில் கலவையைக் கொட்டி சமமாக்கவும்.

    ஆறிய பிறகு துண்டுகளாக வெட்டி பரிமாறவும்.
    குழந்தைகளுக்கு சாக்லேட், பிஸ்கட் என்றால் மிகவும் பிடிக்கும். இந்த வகையில் இது இரண்டையும் வைத்து சூப்பரான மில்க் ஷேக் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    குளிர்ச்சியான பால் - 2 கப்
    சாக்லேட் கிரீம் பிஸ்கட் பாக்கெட் - 1
    கிரீம் இல்லாத சாக்லேட் பிஸ்கட் - 1
    சாக்லேட் சாஸ் - 2 டீஸ்பூன்
        
    செய்முறை:

    முதலில் மிக்ஸியில் பாலை ஊற்றி, அத்துடன் கிரீம் இல்லாத சாக்லேட் பிஸ்கட்டை சேர்த்து நன்கு அடித்துக் கொள்ள வேண்டும்.

    பின் அதில் கிரீம் உள்ள சாக்லேட் பிஸ்கட்டை சேர்த்து நன்கு மென்மையாக அடித்துக் கொள்ள வேண்டும்.

    பின்பு அதனை ஒரு டம்ளரில் ஊற்றி, அத்துடன் சாக்லேட் சாஸ் சேர்த்து நன்கு கிளறி பரிமாறினால், சாக்லேட் பிஸ்கட் மில்க் ஷேக் ரெடி.

    இந்த மில்க் ஷேக்  குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.
    காலையில் செய்ய சாதம் மீந்து விட்டால் மாலையில் அந்த மீந்த சாதத்தை வைத்து சூப்பரான ஸ்நாக்ஸ் செய்யலாம். இன்று இந்த ஸ்நாக்ஸ் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பழைய சாதம் - 1 கப்
    முட்டை - 2
    கடலை மாவு - 1/2 கப்
    வெங்காயம் - 1
    உப்பு - தேவைக்கேற்ப
    பச்சை மிளகாய் - 1
    மிளகாய்த்தூள் - 1/2 தேக்கரண்டி
    மல்லித் தூள் - 1/4 தேக்கரண்டி
    துருவிய கேரட் - 1
    பெருங்காயத்தூள் - சிறிதளவு

    செய்முறை :


    வெங்காயம், பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிகொள்ளவும்.

    முதலில் பழைய சாதத்துடன், இரண்டு முட்டை சேர்த்து நன்றாக மசிக்க வேண்டும்.

    பின் இந்த கலவையுடன் கடலை மாவு, வெங்காயம், மிளகாய் தூள், மல்லி தூள், பெருங்காயத்தூள் ஆகியவற்றை சேர்க்க வேண்டும்.

    அவற்றை நன்றாக கலந்த பின் தேவையான அளவு உப்பு சேர்த்து, கையில் ஒட்டாத அளவிற்கு பிசைந்து கொள்ள வேண்டும்.

    அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும், செய்து வைத்த கலவையை சிறிது சிறிதாக எண்ணெயில் போட்டு பொரிக்கவும்

    நன்றாக சிவந்து வந்தபின் பொரித்த பக்கோடாவை எடுத்து பரிமாறினால் சுவையான பக்கோடா தயார் ஆகிவிடும்.
    ×