என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
ஜீரண சக்தியை தூண்டும் சீரக துவையல்
Byமாலை மலர்22 Nov 2017 5:28 AM GMT (Updated: 22 Nov 2017 5:28 AM GMT)
வாய்க்கசப்பு நீங்க, உள்ளுறுப்புகளை சீராக்கி, ஜீரண சக்தியைத் தூண்ட சீரகத் துவையலை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்வது நல்லது.
தேவையான பொருட்கள் :
சீரகம் - கால் கப்,
இஞ்சி - சிறிய துண்டு,
சின்ன வெங்காயம் - 15,
புளி - சிறிதளவு,
காய்ந்த மிளகாய் - 7,
எண்ணெய் - ஒரு டீஸ்பூன்,
உப்பு - தேவைக்கேற்ப.
தாளிக்க :
கடுகு, கறிவேப்பிலை - தேவைக்கு,
பாட்டி பெருங்காயத்தூள்- சிறிதளவு.
செய்முறை :
சின்ன வெங்காயம், இஞ்சியை தோல் நீக்கி பொடியாக வெட்டிக்கொள்ளவும்.
வாணலியில் எண்ணெயை சூடாக்கி, சீரகம், இஞ்சி, சின்ன வெங்காயம், புளி, காய்ந்த மிளகாயை தனித்தனியாக போட்டு வதக்கவும். வதக்கிய பொருட்கள் நன்றாக ஆறியதும் உப்பு சேர்த்து, சிறிதளவு தண்ணீர் விட்டு மிக்சியில் கெட்டியாக அரைக்கவும்.
மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை, பாட்டி பெருங்காயத்தூள் சேர்த்து தாளித்து துவையலில் சேர்த்து கலந்து பரிமாறவும்.
சூப்பரான சீரக துவையல் ரெடி.
இந்த துவையலை சூடான சாதத்தில் சேர்த்து சாப்பிடலாம். இது, பசியைத் தூண்டும், வாய்க்கசப்பு நீக்கும். உள்ளுறுப்புகளை சீராக்கி, ஜீரண சக்தியைத் தூண்டும்.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
சீரகம் - கால் கப்,
இஞ்சி - சிறிய துண்டு,
சின்ன வெங்காயம் - 15,
புளி - சிறிதளவு,
காய்ந்த மிளகாய் - 7,
எண்ணெய் - ஒரு டீஸ்பூன்,
உப்பு - தேவைக்கேற்ப.
தாளிக்க :
கடுகு, கறிவேப்பிலை - தேவைக்கு,
பாட்டி பெருங்காயத்தூள்- சிறிதளவு.
செய்முறை :
சின்ன வெங்காயம், இஞ்சியை தோல் நீக்கி பொடியாக வெட்டிக்கொள்ளவும்.
வாணலியில் எண்ணெயை சூடாக்கி, சீரகம், இஞ்சி, சின்ன வெங்காயம், புளி, காய்ந்த மிளகாயை தனித்தனியாக போட்டு வதக்கவும். வதக்கிய பொருட்கள் நன்றாக ஆறியதும் உப்பு சேர்த்து, சிறிதளவு தண்ணீர் விட்டு மிக்சியில் கெட்டியாக அரைக்கவும்.
மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை, பாட்டி பெருங்காயத்தூள் சேர்த்து தாளித்து துவையலில் சேர்த்து கலந்து பரிமாறவும்.
சூப்பரான சீரக துவையல் ரெடி.
இந்த துவையலை சூடான சாதத்தில் சேர்த்து சாப்பிடலாம். இது, பசியைத் தூண்டும், வாய்க்கசப்பு நீக்கும். உள்ளுறுப்புகளை சீராக்கி, ஜீரண சக்தியைத் தூண்டும்.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X