search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    உடலுக்கு புத்துணர்ச்சி தரும் கலந்த காய்கறி சூப்
    X

    உடலுக்கு புத்துணர்ச்சி தரும் கலந்த காய்கறி சூப்

    மழைக்காலங்களில் அடிக்கடி சூப் குடிப்பது உடலுக்கு மிகவும் நல்லது. இன்று காய்கறிகளை வைத்து சத்தான சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பொடியாக நறுக்கிய கேரட், பீன்ஸ், காலிஃப்ளவர் கலவை - ஒரு கப்,
    வெங்காயம் - 1
    தக்காளி - 1,
    வெங்காயத்தாள் - ஒரு கைப்பிடி,
    புதினா - ஒரு கைப்பிடி,
    கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி,
    கொத்தமல்லித்தழை - ஒரு கைப்பிடி,
    வெண்ணெய் - ஒரு டீஸ்பூன்,
    மிளகுத்தூள், உப்பு - தேவைக்கு.



    செய்முறை :

    வெங்காயம், தக்காளி, கொத்தமல்லி, புதினா, வெங்காயத்தாளை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    குக்கரில் வெண்ணெய் விட்டு உருக்கியதும் கிராம்பு, கறிவேப்பிலை சேர்த்து வறுக்கவும்.

    அதனுடன் வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும்.

    தக்காளி, வெங்காயம் நன்றாக வதங்கியதும் காய்கறிகள், வெங்காயத்தாள், புதினா, கொத்தமல்லித்தழை, தேவையான அளவு தண்ணீர் விட்டு மூடி 4 விசில் விட்டு இறக்கவும்.

    ஆறிய பிறகு மூடியை திறந்து மிளகுத்தூள், உப்பு சேர்த்து கலந்து கொதிக்க வைத்து சூடாக பருகலாம்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×