என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
குழந்தைகளுக்கு சத்தான கோதுமை ரவை டோக்ளா
Byமாலை மலர்9 Oct 2017 5:38 AM GMT (Updated: 9 Oct 2017 5:38 AM GMT)
குழந்தைகளுக்கு டோக்ளா என்றால் மிகவும் பிடிக்கும். இன்று கோதுமை ரவை வைத்து சத்தான முறையில் டோக்ளா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
கோதுமை ரவை - ஒரு கப்,
பச்சை மிளகாய் - ஒன்று,
இஞ்சி - சிறிய துண்டு,
கொத்தமல்லி - சிறிதளவு,
புளித்த தயிர் - ஒரு டேபிள்ஸ்பூன்,
ஈனோ ஃப்ரூட்சால்ட் பிளெயின் - சிறிதளவு,
தேங்காய் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன்,
எலுமிச்சைச் சாறு - அரை டீஸ்பூன்,
மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை,
கடுகு - அரை டீஸ்பூன்,
சீரகம் - அரை டீஸ்பூன்,
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை,
பொடித்த சர்க்கரை - அரை டீஸ்பூன்,
எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை :
கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
கோதுமை ரவையை சிறிது எண்ணெயில் லேசாக வறுத்தெடுக்கவும்.
இஞ்சியை தோல் சீவி, பச்சை மிளகாயை காம்பு நீக்கி ஒன்றாக சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
வறுத்த கோதுமை ரவையை ஒரு பாத்திரத்தில் போட்டு… உப்பு, இஞ்சி - பச்சை மிளகாய் விழுது, கொத்தமல்லி, ஈனோ ஃப்ரூட் சால்ட், மஞ்சள்தூள், பெருங்காயத்தூள், சீரகம் சேர்க்கவும்.
இதனுடன் தயிர், சிறிதளவு தண்ணீர் சேர்த்து கெட்டி இட்லி மாவு பதத்தில் கரைக்கவும். இதை அரை மணிநேரம் ஊறவிடவும்.
ஒரு இஞ்ச் குழிவுள்ள வட்ட தட்டில் எண்ணெய் தடவி, கரைத்த மாவை பரப்பவும். இட்லி பாத்திரத்தில் இதை 15 நிமிடம் ஆவியில் வேக வைத்து தனியாக வைக்கவும்.
கடுகை எண்ணெயில் வெடிக்க விட்டு இதன் மேலே பரவலாக போடவும்.
பின்னர் அதன் மேலே கொத்தமல்லி, தேங்காய் துருவலையும் பரவலாக தூவவும்.
பொடித்த சர்க்கரையில் சிறிது தண்ணீர், எலுமிச்சைச் சாறு கலந்து மேலாக ஊற்றவும்.
கோதுமை ரவை டோக்ளா தயார்.
இதை விருப்பப்படி துண்டுகள் செய்து, புதினா ஸ்வீட் சட்னியுடன் பரிமாறலாம்.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
கோதுமை ரவை - ஒரு கப்,
பச்சை மிளகாய் - ஒன்று,
இஞ்சி - சிறிய துண்டு,
கொத்தமல்லி - சிறிதளவு,
புளித்த தயிர் - ஒரு டேபிள்ஸ்பூன்,
ஈனோ ஃப்ரூட்சால்ட் பிளெயின் - சிறிதளவு,
தேங்காய் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன்,
எலுமிச்சைச் சாறு - அரை டீஸ்பூன்,
மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை,
கடுகு - அரை டீஸ்பூன்,
சீரகம் - அரை டீஸ்பூன்,
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை,
பொடித்த சர்க்கரை - அரை டீஸ்பூன்,
எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை :
கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
கோதுமை ரவையை சிறிது எண்ணெயில் லேசாக வறுத்தெடுக்கவும்.
இஞ்சியை தோல் சீவி, பச்சை மிளகாயை காம்பு நீக்கி ஒன்றாக சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
வறுத்த கோதுமை ரவையை ஒரு பாத்திரத்தில் போட்டு… உப்பு, இஞ்சி - பச்சை மிளகாய் விழுது, கொத்தமல்லி, ஈனோ ஃப்ரூட் சால்ட், மஞ்சள்தூள், பெருங்காயத்தூள், சீரகம் சேர்க்கவும்.
இதனுடன் தயிர், சிறிதளவு தண்ணீர் சேர்த்து கெட்டி இட்லி மாவு பதத்தில் கரைக்கவும். இதை அரை மணிநேரம் ஊறவிடவும்.
ஒரு இஞ்ச் குழிவுள்ள வட்ட தட்டில் எண்ணெய் தடவி, கரைத்த மாவை பரப்பவும். இட்லி பாத்திரத்தில் இதை 15 நிமிடம் ஆவியில் வேக வைத்து தனியாக வைக்கவும்.
கடுகை எண்ணெயில் வெடிக்க விட்டு இதன் மேலே பரவலாக போடவும்.
பின்னர் அதன் மேலே கொத்தமல்லி, தேங்காய் துருவலையும் பரவலாக தூவவும்.
பொடித்த சர்க்கரையில் சிறிது தண்ணீர், எலுமிச்சைச் சாறு கலந்து மேலாக ஊற்றவும்.
கோதுமை ரவை டோக்ளா தயார்.
இதை விருப்பப்படி துண்டுகள் செய்து, புதினா ஸ்வீட் சட்னியுடன் பரிமாறலாம்.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X