search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    குதிரை வாலி தேங்காய் சாதம்
    X

    குதிரை வாலி தேங்காய் சாதம்

    சிறுதானிய உணவை அடிக்கடி சாப்பிடுவது உடலுக்கும் மிகவும் நல்லது. இன்று குதிரைவாலி அரிசியில் தேங்காய் சாதம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    குதிரை வாலி சாதம் - ஒரு கப்
    தேங்காய்த் துருவல் - முக்கால் கப்,
    உப்பு, தேங்காய் எண்ணெய் - தேவைக்கு,
    கடுகு - அரை டீஸ்பூன்,
    கறிவேப்பிலை - சிறிதளவு,
    கடலைப் பருப்பு - ஒரு டீஸ்பூன்,
    உளுத்தம் பருப்பு - ஒரு டீஸ்பூன்,
    வறுத்த வேர்க்கடலை - ஒரு டீஸ்பூன்,
    பெருங்காயம் - சிட்டிகை,
    காய்ந்த மிளகாய் 3.



    செய்முறை :

    வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை, கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, வறுத்த வேர்க்கடலை, பெருங்காயம், மிளகாய் சேர்த்து தாளிக்கவும்.

    இதனுடன் தேங்காய்த் துருவல் சேர்த்து நன்கு வறுக்கவும்.

    பிறகு வடித்த சாதம் சேர்த்து கிளறி இறக்கி பரிமாறவும்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×