என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
சத்தான சுவையான பார்லி வெஜிடபிள் புலாவ்
Byமாலை மலர்26 Sep 2017 3:33 AM GMT (Updated: 26 Sep 2017 3:33 AM GMT)
உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் அடிக்கடி பார்லியை சேர்த்து கொள்வது நல்லது. இன்று பார்லியை வைத்து புலாவ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
பார்லி - 100 கிராம்,
கேரட், பீன்ஸ், பட்டாணி எல்லாம் சேர்த்து - கால் கிலோ,
வெங்காயம் - 1,
நாட்டுத் தக்காளி - 1,
பட்டை, லவங்கம், ஏலக்காய் - தலா 1,
தயிர் - 1 டேபிள்ஸ்பூன்,
புதினா, கொத்தமல்லி - 1 கைப்பிடி,
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை,
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்,
இஞ்சி-பூண்டு விழுது - 1 டேபிள்ஸ்பூன்,
பச்சை மிளகாய் - 2,
எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்,
உப்பு - தேவைக்கேற்ப.
செய்முறை :
தக்காளி, வெங்காயம், புதினா, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
காய்கறிகளை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ப.மிளகாயை நீளவாக்கில் வெட்டி வைக்கவும்.
கடாயை அடுப்பில் வைத்து காய்ந்ததும் எண்ணெய் ஊற்றி, பட்டை, லவங்கம், ஏலக்காய் போட்டு தாளித்த பின் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் சற்று வதங்கியதும் இஞ்சி - பூண்டு விழுது சேர்த்துக் சிறிது வதக்கிய பின்னர் தக்காளியை சேர்த்து நன்றாக வதக்கவும்.
தக்காளி நன்றாக வதங்கியதும் அடுத்து அதில் நறுக்கிய காய்கறிகள் சேர்த்து வதக்கி, மிளகாய் தூள், மஞ்சள் தூள், தயிர் சேர்த்து மேலும் வதக்கவும்.
எண்ணெய் ஓரங்களில் வரும்போது, பார்லியை சேர்த்து 5 நிமிடங்களுக்கு வதக்கவும்.
ஒன்றுக்கு 2 ( 1:2 ) தண்ணீர் விட்டு, உப்பு சேர்த்து, கொதிக்கும் போது புதினா, கொத்தமல்லி, கீறிய பச்சை மிளகாய் சேர்த்துக் கிளறி, குக்கரில் வைத்து வெயிட் போட்டு, குறைந்த தணலில் வைக்கவும்.
விசில் வர வேண்டாம். 10 நிமிடங்கள் வைத்து எடுத்து சூடாகப் பரிமாறவும்.
இந்த பார்லி புலாவ் உணலுக்கு மிகவும் நல்லது.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
பார்லி - 100 கிராம்,
கேரட், பீன்ஸ், பட்டாணி எல்லாம் சேர்த்து - கால் கிலோ,
வெங்காயம் - 1,
நாட்டுத் தக்காளி - 1,
பட்டை, லவங்கம், ஏலக்காய் - தலா 1,
தயிர் - 1 டேபிள்ஸ்பூன்,
புதினா, கொத்தமல்லி - 1 கைப்பிடி,
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை,
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்,
இஞ்சி-பூண்டு விழுது - 1 டேபிள்ஸ்பூன்,
பச்சை மிளகாய் - 2,
எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்,
உப்பு - தேவைக்கேற்ப.
செய்முறை :
தக்காளி, வெங்காயம், புதினா, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
காய்கறிகளை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ப.மிளகாயை நீளவாக்கில் வெட்டி வைக்கவும்.
கடாயை அடுப்பில் வைத்து காய்ந்ததும் எண்ணெய் ஊற்றி, பட்டை, லவங்கம், ஏலக்காய் போட்டு தாளித்த பின் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் சற்று வதங்கியதும் இஞ்சி - பூண்டு விழுது சேர்த்துக் சிறிது வதக்கிய பின்னர் தக்காளியை சேர்த்து நன்றாக வதக்கவும்.
தக்காளி நன்றாக வதங்கியதும் அடுத்து அதில் நறுக்கிய காய்கறிகள் சேர்த்து வதக்கி, மிளகாய் தூள், மஞ்சள் தூள், தயிர் சேர்த்து மேலும் வதக்கவும்.
எண்ணெய் ஓரங்களில் வரும்போது, பார்லியை சேர்த்து 5 நிமிடங்களுக்கு வதக்கவும்.
ஒன்றுக்கு 2 ( 1:2 ) தண்ணீர் விட்டு, உப்பு சேர்த்து, கொதிக்கும் போது புதினா, கொத்தமல்லி, கீறிய பச்சை மிளகாய் சேர்த்துக் கிளறி, குக்கரில் வைத்து வெயிட் போட்டு, குறைந்த தணலில் வைக்கவும்.
விசில் வர வேண்டாம். 10 நிமிடங்கள் வைத்து எடுத்து சூடாகப் பரிமாறவும்.
இந்த பார்லி புலாவ் உணலுக்கு மிகவும் நல்லது.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X