என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
வாயு தொல்லையை போக்கும் பூண்டு ரசம்
Byமாலை மலர்18 Sep 2017 5:26 AM GMT (Updated: 18 Sep 2017 5:26 AM GMT)
வாயு தொல்லை, வயிறு உபாதைகளுக்கு பூண்டு மிகவும் நல்லது. இன்று பூண்டை வைத்து சூப்பரான ரசம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
பூண்டு - 15 பல்,
மிளகு, சீரகம் - தலா அரை டீஸ்பூன்,
புளி - நெல்லியளவு,
காய்ந்த மிளகாய் - 2,
பெருங்காயத்தூள், மஞ்சள் தூள் - தலா ஒரு சிட்டிகை,
கறிவேப்பிலை - 10 இலைகள்,
கடுகு, நெய் - தலா கால் டீஸ்பூன்,
கொத்தமல்லித்தழை - சிறிதளவு,
உப்பு - தேவையான அளவு.
செய்முறை :
பூண்டை தோல் நீக்கி வைக்கவும்.
கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
பூண்டுடன் மிளகு, சீரகம், கறிவேப்பிலை சேர்த்து விழுதாக அரைத்து எடுக்கவும்.
புளியை தண்ணீரில் ஊற வைத்து கரைத்து வடிகட்டிக்கொள்ளவும்.
புளி கரைத்த தண்ணீரில் உப்பு, மஞ்சள் தூள், பெருங்காயத்தூள் சேர்த்து கொதிக்க விடவும்.
பிறகு அரைத்த விழுது, தேவையான அளவு தண்ணீர் விட்டு ஒரு கொதி விட்டு இறக்கவும்.
வாணலியில் நெய் விட்டு உருகியதும் கடுகு தாளித்து ரசத்துடன் சேர்க்கவும்.
மேலே கொத்தமல்லித்தழை தூவி பரிமாறவும்.
பூண்டு ரசம் ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
பூண்டு - 15 பல்,
மிளகு, சீரகம் - தலா அரை டீஸ்பூன்,
புளி - நெல்லியளவு,
காய்ந்த மிளகாய் - 2,
பெருங்காயத்தூள், மஞ்சள் தூள் - தலா ஒரு சிட்டிகை,
கறிவேப்பிலை - 10 இலைகள்,
கடுகு, நெய் - தலா கால் டீஸ்பூன்,
கொத்தமல்லித்தழை - சிறிதளவு,
உப்பு - தேவையான அளவு.
செய்முறை :
பூண்டை தோல் நீக்கி வைக்கவும்.
கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
பூண்டுடன் மிளகு, சீரகம், கறிவேப்பிலை சேர்த்து விழுதாக அரைத்து எடுக்கவும்.
புளியை தண்ணீரில் ஊற வைத்து கரைத்து வடிகட்டிக்கொள்ளவும்.
புளி கரைத்த தண்ணீரில் உப்பு, மஞ்சள் தூள், பெருங்காயத்தூள் சேர்த்து கொதிக்க விடவும்.
பிறகு அரைத்த விழுது, தேவையான அளவு தண்ணீர் விட்டு ஒரு கொதி விட்டு இறக்கவும்.
வாணலியில் நெய் விட்டு உருகியதும் கடுகு தாளித்து ரசத்துடன் சேர்க்கவும்.
மேலே கொத்தமல்லித்தழை தூவி பரிமாறவும்.
பூண்டு ரசம் ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X