search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    புத்துணர்ச்சி தரும் தக்காளி எலுமிச்சை ஜூஸ்
    X

    புத்துணர்ச்சி தரும் தக்காளி எலுமிச்சை ஜூஸ்

    தினமும் காலையில் பழங்கள், காய்கறிகளில் செய்த ஜூஸ் குடிப்பது அன்றைய தினம் முழுவதும் புத்துணர்ச்சியுடன் வைக்கும். இன்று தக்காளி எலுமிச்சை ஜூஸ் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    தக்காளி - ஒன்று ( பொடியாக நறுக்கவும்),
    இந்துப்பு - சிட்டிகை,
    எலுமிச்சை சாறு - 1 ஸ்பூன்,
    இஞ்சி - சிறிய துண்டு,
    மிளகு சீரகத்தூள் - அரை டீஸ்பூன்.



    செய்முறை :

    தக்காளியை நன்றாக கழுவி துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

    இஞ்சியை தோல் நீக்கி கொள்ளவும்

    மிக்சியில் தக்காளியுடன் உப்பு, இஞ்சி சேர்த்து அரைத்து வடிகட்டவும்.

    வடிகட்டிய ஜூசுடன் மிளகு சீரகத்தூள், எலுமிச்சை சாறு கலந்து பருகலாம்.

    சூப்பரான சத்தான தக்காளி எலுமிச்சை ஜூஸ் ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×