search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    சளி, இருமலுக்கு உகந்த கற்பூரவல்லி சட்னி
    X

    சளி, இருமலுக்கு உகந்த கற்பூரவல்லி சட்னி

    சளி, தொண்டை வலி, இருமல், வாய்புண், வயிற்று கோளாறால் அவதிப்படுபவர்கள் கற்பூரவல்லியை உணவில் சேர்த்து கொள்ளலாம். இன்று கற்பூரவல்லி சட்னி செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கற்பூரவல்லி இலைகள் - 15,
    தேங்காய்த் துருவல் - கால் கப்,
    பச்சை மிளகாய் - 2,
    புளி - கோலி குண்டு அளவு,
    பெருங்காயம் - சிட்டிகை,
    கடுகு, உளுந்தம் பருப்பு - தலா கால் டீஸ்பூன்,
    உப்பு - தேவையான அளவு,
    எண்ணெய் - அரை டீஸ்பூன்.



    செய்முறை :

    கற்பூரவல்லி இலைகளை நன்றாக கழுவி வைக்கவும்.

    வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு பச்சை மிளகாய், கற்பூரவல்லி இலைகள், தேங்காய்த் துருவல், புளியை தனித்தனியாக சேர்த்து வதக்கி ஆற விடவும்.

    அனைத்தும் நன்றாக ஆறிய பின் மிக்சியில் போட்டு உப்பு சேர்த்து அரைத்த கொள்ளவும்.

    அதே வாணலியில் மீதமுள்ள எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, உளுந்தம் பருப்பு, பெருங்காயம் சேர்த்து தாளித்து சட்னியில் சேர்த்து கலந்து பரிமாறவும்.

    சூப்பரான கற்பூரவல்லி சட்னி ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×