என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
சத்தான சுவையான கருப்பு உளுந்து மசாலா
Byமாலை மலர்1 Sep 2017 3:31 AM GMT (Updated: 1 Sep 2017 3:31 AM GMT)
சப்பாத்தி, ரொட்டி, நாண், தோசை, இட்லி வகைகளுடன் சாப்பிட ஏற்றது இந்த கருப்பு உளுந்து மசாலா. இன்று இதனை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
முளைக்கட்டிய கருப்பு உளுந்து - ஒரு கப்,
எண்ணெய் - ஒரு டீஸ்பூன்,
வெங்காயம் - 2,
தக்காளி - 4,
இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்,
மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்,
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்,
தனியாத்தூள் (மல்லித்தூள்) - ஒரு டீஸ்பூன்,
பட்டை - சிறிய துண்டு,
சீரகம் - ஒரு டீஸ்பூன்,
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு,
கொத்தமல்லித்தழை - சிறிதளவு.
செய்முறை :
வெங்காயம், கொத்தமல்லி, தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு சூடானதும் பட்டை, சீரகம், இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
அடுத்து அதில் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.
தக்காளி ஓரளவு வதங்கியதும மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், தனியாத்தூள் சேர்த்து பச்சை வாசனை போக நன்கு வதக்கவும்.
மசாலா பச்சை வாசனை போனவுடன் கருப்பு உளுந்து சேர்த்து கலந்து மூடி மூன்று விசில் விட்டு இறக்கவும்.
விசில் போனவுடன் குக்கர் மூடியை திறந்து உப்பு சேர்த்து ஐந்து நிமிடம் கொதிக்க வைத்து இறக்கி மேலே கொத்தமல்லித்தழை, வெண்ணெய் சேர்த்து சூடாக பரிமாறவும்.
சத்தான கருப்பு உளுந்து மசாலா ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
முளைக்கட்டிய கருப்பு உளுந்து - ஒரு கப்,
எண்ணெய் - ஒரு டீஸ்பூன்,
வெங்காயம் - 2,
தக்காளி - 4,
இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்,
மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்,
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்,
தனியாத்தூள் (மல்லித்தூள்) - ஒரு டீஸ்பூன்,
பட்டை - சிறிய துண்டு,
சீரகம் - ஒரு டீஸ்பூன்,
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு,
கொத்தமல்லித்தழை - சிறிதளவு.
செய்முறை :
வெங்காயம், கொத்தமல்லி, தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு சூடானதும் பட்டை, சீரகம், இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
அடுத்து அதில் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.
தக்காளி ஓரளவு வதங்கியதும மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், தனியாத்தூள் சேர்த்து பச்சை வாசனை போக நன்கு வதக்கவும்.
மசாலா பச்சை வாசனை போனவுடன் கருப்பு உளுந்து சேர்த்து கலந்து மூடி மூன்று விசில் விட்டு இறக்கவும்.
விசில் போனவுடன் குக்கர் மூடியை திறந்து உப்பு சேர்த்து ஐந்து நிமிடம் கொதிக்க வைத்து இறக்கி மேலே கொத்தமல்லித்தழை, வெண்ணெய் சேர்த்து சூடாக பரிமாறவும்.
சத்தான கருப்பு உளுந்து மசாலா ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X