என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
ஊட்டச்சத்துகள் நிறைந்த உளுந்து - பச்சரிசி இனிப்பு கஞ்சி
Byமாலை மலர்22 Aug 2017 3:31 AM GMT (Updated: 22 Aug 2017 3:31 AM GMT)
பெண்களின் உடல் வலிமைக்கும், எலுப்புகளுக்கும் மிகவும் நல்லது உளுந்து. இன்று உளுந்தை வைத்து சத்தான கஞ்சி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருள்கள் :
தோல் உளுந்து - 1/2 கப்
பச்சரிசி - 1/4 கப்
தேங்காய் துருவல் - 1/2 கப்
கருப்பட்டி - 1/4 கப்
பூண்டு பற்கள் - 4
வெந்தயம் - 1 டீஸ்பூன்
உப்பு - 1/4 டீஸ்பூன்
செய்முறை :
தேங்காய் துருவலுடன் ஒரு கப் தண்ணீர் சேர்த்து தேங்காய் பால் எடுத்து வைக்கவும்.
ஒரு வாயகன்ற பாத்திரத்தில் கால் கப் தண்ணீருடன் கருப்பட்டியை சேர்த்து கொதிக்க விடவும். கருப்பட்டி கரைந்ததும் வடிகட்டி வைக்கவும்.
குக்கரில் உளுந்தம்பருப்பு, பச்சரிசி இரண்டையும் ஒன்றாக சேர்த்து நன்றாக கழுவி அதனுடன் 5 கப் தண்ணீர், உப்பு மற்றும் வெந்தயம், பூண்டு சேர்த்து மூடி அடுப்பை மிதமான சூட்டில் வைக்கவும்.
நீராவி வந்ததும் வெயிட் போட்டு 5 விசில் வந்ததும் இறக்கி ஒரு மத்து அல்லது கரண்டி கொண்டு நன்றாக மசிக்கவும்.
பிறகு அதனுடன் கரைத்து வைத்துள்ள கருப்பட்டி தண்ணீர், தேங்காய் பால் இரண்டையும் சேர்த்து நன்றாக கலக்கி விடவும். கெட்டியாக இருந்தால் ஒரு கப் வெந்நீர் சேர்த்துக் கொள்ளவும்.
சுவையான உளுந்து - பச்சரிசி இனிப்பு கஞ்சி தயார்.
இது உடலுக்கு சக்தியை தரக்கூடிய ஒரு உணவு வகை.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
தோல் உளுந்து - 1/2 கப்
பச்சரிசி - 1/4 கப்
தேங்காய் துருவல் - 1/2 கப்
கருப்பட்டி - 1/4 கப்
பூண்டு பற்கள் - 4
வெந்தயம் - 1 டீஸ்பூன்
உப்பு - 1/4 டீஸ்பூன்
செய்முறை :
தேங்காய் துருவலுடன் ஒரு கப் தண்ணீர் சேர்த்து தேங்காய் பால் எடுத்து வைக்கவும்.
ஒரு வாயகன்ற பாத்திரத்தில் கால் கப் தண்ணீருடன் கருப்பட்டியை சேர்த்து கொதிக்க விடவும். கருப்பட்டி கரைந்ததும் வடிகட்டி வைக்கவும்.
குக்கரில் உளுந்தம்பருப்பு, பச்சரிசி இரண்டையும் ஒன்றாக சேர்த்து நன்றாக கழுவி அதனுடன் 5 கப் தண்ணீர், உப்பு மற்றும் வெந்தயம், பூண்டு சேர்த்து மூடி அடுப்பை மிதமான சூட்டில் வைக்கவும்.
நீராவி வந்ததும் வெயிட் போட்டு 5 விசில் வந்ததும் இறக்கி ஒரு மத்து அல்லது கரண்டி கொண்டு நன்றாக மசிக்கவும்.
பிறகு அதனுடன் கரைத்து வைத்துள்ள கருப்பட்டி தண்ணீர், தேங்காய் பால் இரண்டையும் சேர்த்து நன்றாக கலக்கி விடவும். கெட்டியாக இருந்தால் ஒரு கப் வெந்நீர் சேர்த்துக் கொள்ளவும்.
சுவையான உளுந்து - பச்சரிசி இனிப்பு கஞ்சி தயார்.
இது உடலுக்கு சக்தியை தரக்கூடிய ஒரு உணவு வகை.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X