என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
சர்க்கரை நோயாளிகளுக்கான பாகற்காய் முட்டை சாதம்
Byமாலை மலர்17 Aug 2017 5:35 AM GMT (Updated: 17 Aug 2017 6:55 AM GMT)
சர்க்கரை நோயாளிகள் அடிக்கடி உணவில் பாகற்காய் சேர்த்து கொள்வது நல்லது. இன்று பாகற்காய், முட்டை சேர்த்து சாதம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
உதிராக வடித்த சாதம் - 1 கப்,
பாகற்காய் - 1 பெரியது
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்,
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்,
முட்டை - 2,
புளி - எலுமிச்சம்பழ அளவு,
வெங்காயம் - 2
உப்பு - தேவைக்கு,
தாளிக்க...
கடுகு, உளுந்தம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா 1 டீஸ்பூன்,
நல்லெண்ணெய் - 4 டீஸ்பூன்,
கறிவேப்பிலை - சிறிதளவு
பெருங்காயத்தூள் - 1/4 டீஸ்பூன்.
அலங்கரிக்க...
வறுத்த வேர்க்கடலை - 2 டீஸ்பூன்,
வறுத்த காய்ந்த மிளகாய் - 3,
கொத்தமல்லித்தழை, புதினா - தேவைக்கு.
செய்முறை :
பாகற்காயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
புளியை கால் கப் வெந்நீரில் ஊறவைத்து கரைத்து வடிகட்டிக் கொள்ளவும்.
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை போட்டு தாளித்த பின் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதில் முட்டையை உடைத்து ஊற்றி வதக்கவும்.
அடுத்து பாகற்காயை சேர்த்து எண்ணெய் பிரியும் வரை நன்கு வதக்க வேண்டும்.
அடுத்து அதில் புளிக்கரைசல், மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், உப்பு, சேர்த்து நன்கு கிளறவும்.
பாகற்காய் நன்றாக வதங்கி திக்கான பதம் வந்தவுடன் உதிரியாக வடித்த சாதத்தை சேர்த்து நன்கு கிளறவும்.
கடைசியாக புதினா, கொத்தமல்லித்தழையை தூவி, அதன் மேல் வேர்க்கடலை, காய்ந்தமிளகாய் அலங்கரித்து இறக்கி பரிமாறவும்.
சூப்பரான பாகற்காய் சாதம் ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
உதிராக வடித்த சாதம் - 1 கப்,
பாகற்காய் - 1 பெரியது
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்,
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்,
முட்டை - 2,
புளி - எலுமிச்சம்பழ அளவு,
வெங்காயம் - 2
உப்பு - தேவைக்கு,
தாளிக்க...
கடுகு, உளுந்தம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா 1 டீஸ்பூன்,
நல்லெண்ணெய் - 4 டீஸ்பூன்,
கறிவேப்பிலை - சிறிதளவு
பெருங்காயத்தூள் - 1/4 டீஸ்பூன்.
அலங்கரிக்க...
வறுத்த வேர்க்கடலை - 2 டீஸ்பூன்,
வறுத்த காய்ந்த மிளகாய் - 3,
கொத்தமல்லித்தழை, புதினா - தேவைக்கு.
செய்முறை :
பாகற்காயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
புளியை கால் கப் வெந்நீரில் ஊறவைத்து கரைத்து வடிகட்டிக் கொள்ளவும்.
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை போட்டு தாளித்த பின் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதில் முட்டையை உடைத்து ஊற்றி வதக்கவும்.
அடுத்து பாகற்காயை சேர்த்து எண்ணெய் பிரியும் வரை நன்கு வதக்க வேண்டும்.
அடுத்து அதில் புளிக்கரைசல், மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், உப்பு, சேர்த்து நன்கு கிளறவும்.
பாகற்காய் நன்றாக வதங்கி திக்கான பதம் வந்தவுடன் உதிரியாக வடித்த சாதத்தை சேர்த்து நன்கு கிளறவும்.
கடைசியாக புதினா, கொத்தமல்லித்தழையை தூவி, அதன் மேல் வேர்க்கடலை, காய்ந்தமிளகாய் அலங்கரித்து இறக்கி பரிமாறவும்.
சூப்பரான பாகற்காய் சாதம் ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X