search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    சர்க்கரை நோய்க்கு உகந்த ஆவாரம்பூ கஷாயம்
    X

    சர்க்கரை நோய்க்கு உகந்த ஆவாரம்பூ கஷாயம்

    ஆவாரம்பூ கஷாயம் சர்க்கரை நோய்க்கு கைகண்ட மருந்து. சிறுநீர்க் கோளாறுகளை நிவர்த்தி செய்யும். இந்த கஷாயத்தை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    ஆவாரம்பூ - 100 கிராம்,
    சுக்கு - ஒரு துண்டு,
    ஏலக்காய் - 20,
    உலர்ந்த வல்லாரை இலை - 100 கிராம்,
    சோம்பு - ஒரு டீஸ்பூன்.



    செய்முறை :

    மேற்சொன்ன அனைத்துப் பொருட்களையும் ஒன்றாகச் சேர்த்து, ஒன்றிரண்டாகப் பொடித்து வைத்துக்கொள்ளவும்.

    தேவையானபோது அதில் கையளவு எடுத்து, அரை லிட்டர் தண்ணீர் ஊற்றி கால் லிட்டராக ஆகும் வரை சுண்டக் காய்ச்ச வேண்டும்.

    பின்னர் அதனை வடிகட்டி, தேவையான அளவு பனை வெல்லம் அல்லது பனங்கற்கண்டு அல்லது கருப்பட்டி சேர்த்துக் குடிக்கலாம்.

    சூப்பரான ஆவாரம்பூ கஷாயம் ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×