என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
சத்தான சுவையான பச்சை பயறு கிரேவி
Byமாலை மலர்27 July 2017 5:22 AM GMT (Updated: 27 July 2017 5:22 AM GMT)
பயறு வகைகளை வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறை சமைத்து சாப்பிட்டால், உடலுக்கு வேண்டிய சத்துக்கள் கிடைக்கும். இன்று பச்சை பயறு குழம்பு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
பச்சை பயறு - 1/2 கப்
புளி - 1 எலுமிச்சை அளவு
சாம்பார் பொடி - 1 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
தக்காளி - 1
சின்ன வெங்காயம் - 15
பூண்டு - 3 பல்
எண்ணெய் - தேவையான அளவு
கடுகு - 1/2 டீஸ்பூன்
வெந்தயம் - 1/2 டீஸ்பூன்
பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லி - சிறிதளவு.
செய்முறை:
பச்சை பயறை நீரில் போட்டு, 6 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பின் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் பச்சை பயறை கழுவிப் போட்டு, ஒரு கப் தண்ணீர் ஊற்றி, ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து, வேக விட்டு இறக்க வேண்டும். விசில் போனவுடன் குக்கரை திறந்து பயிறை சற்று மசித்து கொள்ளவும்.
புளியை 2 கப் நீரில் போட்டு ஊற வைத்து, பின் அதனை கரைத்து, தண்ணீரை வடித்துக் கொள்ள வேண்டும்.
வெங்காயம், கொத்தமல்லி, பூண்டு, தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு, வெந்தயம், பெருங்காயத் தூள், கறிவேப்பிலை போட்டு தாளித்த பின் வெங்காயம், பூண்டு சேர்த்து நன்கு வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளியை சேர்த்து வதக்கவும்.
தக்காளி நன்றாக குழைய வெந்ததும் அதில் கரைத்து வைத்துள்ள புளித் தண்ணீர், சாம்பார் பொடி, மஞ்சள் தூள் மற்றும் உப்பு போட்டு கிளறி, கொதிக்க வைக்க வேண்டும்.
குழம்பானது நன்கு கொதித்தது, திக்கான பதம் வந்ததும் அதில் வேக வைத்துள்ள மசித்து வைத்துள்ள பச்சை பயறை போட்டு, மீண்டும் 5 நிமிடம் கொதிக்க வைத்து இறக்க வேண்டும்.
இப்போது சுவையான பச்சை பயறு கிரேவி ரெடி!!!
இதனை சப்பாத்தி, சாதத்துடன் சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
பச்சை பயறு - 1/2 கப்
புளி - 1 எலுமிச்சை அளவு
சாம்பார் பொடி - 1 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
தக்காளி - 1
சின்ன வெங்காயம் - 15
பூண்டு - 3 பல்
எண்ணெய் - தேவையான அளவு
கடுகு - 1/2 டீஸ்பூன்
வெந்தயம் - 1/2 டீஸ்பூன்
பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லி - சிறிதளவு.
செய்முறை:
பச்சை பயறை நீரில் போட்டு, 6 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பின் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் பச்சை பயறை கழுவிப் போட்டு, ஒரு கப் தண்ணீர் ஊற்றி, ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து, வேக விட்டு இறக்க வேண்டும். விசில் போனவுடன் குக்கரை திறந்து பயிறை சற்று மசித்து கொள்ளவும்.
புளியை 2 கப் நீரில் போட்டு ஊற வைத்து, பின் அதனை கரைத்து, தண்ணீரை வடித்துக் கொள்ள வேண்டும்.
வெங்காயம், கொத்தமல்லி, பூண்டு, தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு, வெந்தயம், பெருங்காயத் தூள், கறிவேப்பிலை போட்டு தாளித்த பின் வெங்காயம், பூண்டு சேர்த்து நன்கு வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளியை சேர்த்து வதக்கவும்.
தக்காளி நன்றாக குழைய வெந்ததும் அதில் கரைத்து வைத்துள்ள புளித் தண்ணீர், சாம்பார் பொடி, மஞ்சள் தூள் மற்றும் உப்பு போட்டு கிளறி, கொதிக்க வைக்க வேண்டும்.
குழம்பானது நன்கு கொதித்தது, திக்கான பதம் வந்ததும் அதில் வேக வைத்துள்ள மசித்து வைத்துள்ள பச்சை பயறை போட்டு, மீண்டும் 5 நிமிடம் கொதிக்க வைத்து இறக்க வேண்டும்.
இப்போது சுவையான பச்சை பயறு கிரேவி ரெடி!!!
இதனை சப்பாத்தி, சாதத்துடன் சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X