search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    சத்தான டிபன் சாமை அரிசி உப்புமா
    X

    சத்தான டிபன் சாமை அரிசி உப்புமா

    காலை, மாலை, இரவு நேரங்களில் சத்தான டிபன் சாப்பிட விரும்பினால் சாமை அரிசியில் உப்புமா செய்து சாப்பிடலாம். இன்று இதன் செய்முறை விளக்கத்தை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    சாமை அரிசி - ஒரு கப்
    எண்ணெய் - இரண்டு டீஸ்பூன்
    கடுகு - அரை டீஸ்பூன்
    கேரட் - 1
    கடலை பருப்பு - ஒரு டீஸ்பூன்
    உளுந்தம் பருப்பு - ஒரு டீஸ்பூன்
    வெங்காயம் - ஒன்று
    பச்சை மிளகாய் - ஒன்று
    உப்பு - தேவைகேற்ப
    கறிவேப்பில்லை - சிறிதளவு.



    செய்முறை :

    * கேரட், வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * ஒரு கப் சாமை அரிசி, மூன்று கப் தண்ணீர் ஊற்றி நான்கு விசில் வந்தவுடன் இறக்கி ஆறவிடவும்.

    * கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கடலை பருப்பு, உளுந்தம் பருப்பு போட்டு தாளித்த பின் வெங்காயம், கேரட், பச்சை மிளகாய், உப்பு ஆகியவற்றை ஒவொன்றாக சேர்த்து வதக்கவும்.

    * வெங்காயம், கேரட் நன்றாக வதங்கியதும் வேகவைத்த சாமை அரிசி, கறிவேப்பில்லை சேர்த்து கலந்து பரிமாறவும்.

    * சத்தான சாமை அரிசி உப்புமா ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×