என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
கேழ்வரகு ஆலு ஸ்டஃப்டு மசாலா பரோட்டா
Byமாலை மலர்6 July 2017 5:26 AM GMT (Updated: 6 July 2017 5:26 AM GMT)
குழந்தைகளுக்கு உருளைக்கிழங்கு மிகவும் பிடிக்கும். இன்று உருளைக்கிழங்கு, கேழ்வரகு வைத்து சத்தான பரோட்டா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
கேழ்வரகு - 1 கப்
கோதுமை மாவு - முக்கால் கப்
வெங்காயம் - 1
மஞ்சள் தூள் - அரை ஸ்பூன்
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
ஓமம் - கால் ஸ்பூன்
மிளகாய் தூள் - அரை ஸ்பூன்
மாங்காய் தூள் - அரை ஸ்பூன்
சீரகபொடி - அரை ஸ்பூன்
உப்பு, எண்ணெய் - தேவைக்கு.
செய்முறை :
* வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* உருளைக்கிழங்கை நன்றாக வேகவைத்து மசித்து கொள்ளவும்.
* கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
* வெங்காயம் நன்றாக வதங்கியதும் அடுத்து உருளைக்கிழங்கை போட்டு வதக்கவும்.
* அடுத்து அதில் மஞ்சள் தூள், பெருங்காய தூள், ஓமம், மிளக்காய் தூள், சீரகபொடி, மாங்காய் தூள், உப்பு சேர்த்து நன்றாக கலந்து அடுப்பை அணைத்து விடவும்.
* ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, கேழ்வரகு மாவு, உப்பு போட்டு தேவையான தண்ணீர் ஊற்றி சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து வைக்கவும்.
* தயார் செய்து வைத்து இருக்கும் ராகி கோதுமை மாவில் ஒரு உருண்டை எடுத்து கிண்ணம் போல் செய்து அதன் நடுவில் ஆலு மசாலா சிறிதளவு வைத்து மூடி சப்பாத்திகளாக உருட்டி வைக்கவும்.
* தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் உருட்டி வைத்துள்ள ஆலு சப்பாத்தியை போட்டு சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுக்கவும்.
* சூப்பரான சத்தான கேழ்வரகு ஆலு ஸ்டஃப்டு மசாலா பரோட்டா ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
கேழ்வரகு - 1 கப்
கோதுமை மாவு - முக்கால் கப்
வெங்காயம் - 1
மஞ்சள் தூள் - அரை ஸ்பூன்
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
ஓமம் - கால் ஸ்பூன்
மிளகாய் தூள் - அரை ஸ்பூன்
மாங்காய் தூள் - அரை ஸ்பூன்
சீரகபொடி - அரை ஸ்பூன்
உப்பு, எண்ணெய் - தேவைக்கு.
செய்முறை :
* வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* உருளைக்கிழங்கை நன்றாக வேகவைத்து மசித்து கொள்ளவும்.
* கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
* வெங்காயம் நன்றாக வதங்கியதும் அடுத்து உருளைக்கிழங்கை போட்டு வதக்கவும்.
* அடுத்து அதில் மஞ்சள் தூள், பெருங்காய தூள், ஓமம், மிளக்காய் தூள், சீரகபொடி, மாங்காய் தூள், உப்பு சேர்த்து நன்றாக கலந்து அடுப்பை அணைத்து விடவும்.
* ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, கேழ்வரகு மாவு, உப்பு போட்டு தேவையான தண்ணீர் ஊற்றி சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து வைக்கவும்.
* தயார் செய்து வைத்து இருக்கும் ராகி கோதுமை மாவில் ஒரு உருண்டை எடுத்து கிண்ணம் போல் செய்து அதன் நடுவில் ஆலு மசாலா சிறிதளவு வைத்து மூடி சப்பாத்திகளாக உருட்டி வைக்கவும்.
* தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் உருட்டி வைத்துள்ள ஆலு சப்பாத்தியை போட்டு சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுக்கவும்.
* சூப்பரான சத்தான கேழ்வரகு ஆலு ஸ்டஃப்டு மசாலா பரோட்டா ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X