என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
சத்தான காலை டிபன் அரிசி உப்புமா கொழுக்கட்டை
Byமாலை மலர்4 July 2017 3:34 AM GMT (Updated: 4 July 2017 3:34 AM GMT)
திடீர் விருந்தினர்களைச் சமாளிக்கவும் பள்ளி, கல்லூரி சென்று சோர்வாக வரும் பிள்ளைகளையும் அசத்த அருமையான சிற்றுண்டி இது. இதன் செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
பச்சரிசி - 1 டம்ளர்
தேங்காய் - கால் மூடி
கடுகு - 1 டீஸ்பூன்
கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன்
வெள்ளை உளுந்தம்பருப்பு - 1 டீஸ்பூன்
மிளகாய் வற்றல் - 2
கறிவேப்பிலை - 1 இணுக்கு
பெருகாயம் - சிறிதளவு
எண்ணெய் - 1 டீஸ்பூன்
செய்முறை :
* பச்சரிசியை நன்றாக கழுவி ஊற வைக்கவும்.
* அரிசியைக் களைந்து அதனுடன் துருவிய தேங்காயில் பாதியையும் உப்பையும் சேர்த்து அரைக்கவும். (தண்ணீர் அதிகம் சேர்க்கவோ மையாக அரைக்கவோ வேண்டாம், நறநற பதம் போதும்.)
* வாணலியில் எண்ணெய் விட்டுக் கடுகு, கடலைப்பருப்பு, வெள்ளை உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலையைத் தாளிசம் செய்து விட்டு அரைத்த அரிசியைச் சேர்க்கவும்.
* அதனுடன் பாதி தேங்காய்த்துருவலையும் சேர்க்க வேண்டும்.
* கைவிடாமல் கிளற வேண்டும். உப்புமாவிற்குக் கிளறுவது போல் கிளற வேண்டும்.
* உதிரியாக வந்தவுடன் உப்பு, காரம் சரியாக இருக்கிறதா என்று பார்த்து விட்டு உருண்டைகள் உருட்டவும்.
* இட்லிக்குக்கரில் தண்ணீர் விட்டு இட்லித்தட்டுகளில் உருட்டிய உருண்டைகளை வைத்து ஆவியில் வேக வைக்கவும்.
* கொழுக்கட்டை வெந்த பிறகு இறக்கி வைக்கவும்.
* அரிசி உப்புமா கொழுக்கட்டை ரெடி.
* அதை சட்னி, புதினா சட்னியுடன் சாப்பிட சூப்பராக இருக்கும்.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
பச்சரிசி - 1 டம்ளர்
தேங்காய் - கால் மூடி
கடுகு - 1 டீஸ்பூன்
கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன்
வெள்ளை உளுந்தம்பருப்பு - 1 டீஸ்பூன்
மிளகாய் வற்றல் - 2
கறிவேப்பிலை - 1 இணுக்கு
பெருகாயம் - சிறிதளவு
எண்ணெய் - 1 டீஸ்பூன்
செய்முறை :
* பச்சரிசியை நன்றாக கழுவி ஊற வைக்கவும்.
* அரிசியைக் களைந்து அதனுடன் துருவிய தேங்காயில் பாதியையும் உப்பையும் சேர்த்து அரைக்கவும். (தண்ணீர் அதிகம் சேர்க்கவோ மையாக அரைக்கவோ வேண்டாம், நறநற பதம் போதும்.)
* வாணலியில் எண்ணெய் விட்டுக் கடுகு, கடலைப்பருப்பு, வெள்ளை உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலையைத் தாளிசம் செய்து விட்டு அரைத்த அரிசியைச் சேர்க்கவும்.
* அதனுடன் பாதி தேங்காய்த்துருவலையும் சேர்க்க வேண்டும்.
* கைவிடாமல் கிளற வேண்டும். உப்புமாவிற்குக் கிளறுவது போல் கிளற வேண்டும்.
* உதிரியாக வந்தவுடன் உப்பு, காரம் சரியாக இருக்கிறதா என்று பார்த்து விட்டு உருண்டைகள் உருட்டவும்.
* இட்லிக்குக்கரில் தண்ணீர் விட்டு இட்லித்தட்டுகளில் உருட்டிய உருண்டைகளை வைத்து ஆவியில் வேக வைக்கவும்.
* கொழுக்கட்டை வெந்த பிறகு இறக்கி வைக்கவும்.
* அரிசி உப்புமா கொழுக்கட்டை ரெடி.
* அதை சட்னி, புதினா சட்னியுடன் சாப்பிட சூப்பராக இருக்கும்.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X