search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    சுவையான சத்தான கேழ்வரகு கேரட் தோசை
    X

    சுவையான சத்தான கேழ்வரகு கேரட் தோசை

    அதிக சத்துக்கள் நிறைந்த கேழ்வரகை தினமும் உணவில் சேர்த்து கொள்வது மிகவும் நல்லது. இன்று கேழ்வரகு கேரட் சேர்த்து தோசை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கேழ்வரகு மாவு - 1 கப்,
    தோசை மாவு - 2 கரண்டி,
    தண்ணீர், உப்பு - தேவையான அளவு,
    சீரகம் - சிறிதளவு,
    பச்சைமிளகாய் - 2
    வெங்காயம் - 1
    கேரட் - 1
    கொத்தமல்லி - சிறிது
    கறிவேப்பிலை - சிறிது



    செய்முறை :

    * வெங்காயம், கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * கேரட்டை துருவிக்கொள்ளவும்.

    * ராகி மாவில் தோசை மாவு, தேவையான அளவு உப்பு, தாளித்த சீரகம், துருவிய கேரட், வெங்காயம், கொத்தமல்லி, கறிவேப்பிலை, பச்சை மிளகாயைச் சேர்த்து தோசை மாவுப் பதத்துக்குக் கலக்க வேண்டும்.

    * தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் அதில் மாவை 1 கரண்டி ஊற்றி சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு எடுக்கவும்.

    * சுவையான சத்தான கேழ்வரகு கேரட் தோசை ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×