search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    சத்தான சுவையான சைடிஷ் பாலக் தால்
    X

    சத்தான சுவையான சைடிஷ் பாலக் தால்

    பாலக் / பசலைக்கீரையை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்வது உடல் ஆரோகியத்திற்கு மிகவும் நல்லது. இன்று பாலக் தால் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பாலக்கீரை - 1 கட்டு
    துவரம் பருப்பு - கால் கப்
    பெரிய வெங்காயம் - 1
    தக்காளி - 1
    பச்சை மிளகாய் - 2
    இஞ்சி - 1 துண்டு
    பூண்டு - 4 பற்கள்
    சாம்பார் பொடி - 1/2 டீஸ்பூன்
    மிளகாய் பொடி - 1/2 டீஸ்பூன்
    மஞ்சள் பொடி - 1/2 டீஸ்பூன்
    கடுகு - 1/2 டீஸ்பூன்
    சீரகம் - 1/2 டீஸ்பூன்
    எண்ணெய், உப்பு - தேவையான அளவு.



    செய்முறை :

    * தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * பசலைக்கீரையை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * துவரம் பருப்புடன் தண்ணீர், சிறிது மஞ்சள், பூண்டு, எண்ணெய் சேர்த்து மசிய வேக வைக்கவும்.

    * கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு சீரகம் தாளித்த பின்னர் இஞ்சி, பூண்டு, பச்சைமிளகாய், வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

    * வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளியை சேர்த்து வதக்கவும்.

    * 2 நிமிஷம் கழித்து மஞ்சள் தூள், மிளகாய் தூள், சாம்பார் பொடி, சிறிது உப்பு சேர்த்து வதக்கவும்.

    * தக்காளி மசிய வெந்ததும், சுத்தம் செய்து பொடியாக நறுக்கிய கீரையை சேர்த்து கலந்து வேகவிடனும்.

    * தண்ணீர் சேர்க்க வேண்டாம். கீரை வேகும்போது விடும் நீரே போதுமானதாக இருக்கும். கீரை நன்றாக வெந்தததும் வேகவைத்த பருப்பு தேவையான உப்பு சேர்த்து கலந்து வேகவிடவும்.

    * கரண்டி அல்லது மத்து கொண்டு நல்லா மசித்து விட்டு கீரை வெந்து குழம்பு கொதிக்கும் போது தீயை அணைச்சுட்டு சூடான சாதத்துடன் பரிமாறவும்.

    * சத்தான பாலக் தால் ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×