என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த சிறுதானிய காய்கறி இட்லி
Byமாலை மலர்24 Jun 2017 3:31 AM GMT (Updated: 24 Jun 2017 3:31 AM GMT)
சர்க்கரை நோயாளிகள், வயதானவர்கள் சிறுதானிய உணவுகளை அடிக்கடி எடுத்துக்கொள்வது நல்லது. இந்த வகையில் இன்று சிறுதானிய காய்கறி இட்லி செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
வரகு, சாமை, திணை, குதிரை வாலி (நான்கு தானியங்களின் குருணைகள்) - ஒரு கப்
பயத்தம் பருப்பு - கால் கப்
உளுத்தம் பருப்பு - அரை கப்
இஞ்சி - சிறிய துண்டு
பீன்ஸ் - 10,
பச்சைமிளகாய் - 3
கேரட் - 1
பட்டாணி - அரை கப்
கொத்தமல்லி, பெருங்காயத்தூள், உப்பு, நெய் - தேவையான அளவு
செய்முறை :
* சிறுதானிய குருணைகளை 1 மணி நேரம் ஊறவிடவும்.
* கேரட்டை துருவிக்கொள்ளவும்.
* கொத்தமல்லி, பீன்ஸை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* பயத்தம் பருப்பு, உளுந்தம் பருப்பு இரண்டையும் 1 மணி நேரம் ஊறவிட்டு, பின் தண்ணீரை வடித்து விட்டு, ஊற வைத்த குருணைகள், பச்சைமிளகாய், தோல் நீக்கி நறுக்கிய இஞ்சி, பெருங்காயம் சேர்த்து நன்றாக அரைக்கவும்.
* ஒரு பாத்திரத்தில் அரைத்த மாவை போட்டு அதனுடன் கொத்தமல்லி, உப்பு, பீன்ஸ், கேரட் துருவல், பட்டாணி சேர்த்து இட்லி மாவு பதத்துக்கு கரைத்துக் கொள்ளவும்.(தேவைப்பட்டால் சிறிதளவு தயிர் சேர்க்கவும்).
* பின்னர் இட்லி தட்டில் சிறிதளவு நெய்யைத் தடவி, அதில் இட்லி மாவை ஊற்றி, வேகவைத்து எடுக்கவும்.
* இந்த இட்லி சத்தானது, எளிதில் செரிக்கும் தன்மை கொண்டது. சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு மிகவும் ஏற்றது இந்த இட்லி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
வரகு, சாமை, திணை, குதிரை வாலி (நான்கு தானியங்களின் குருணைகள்) - ஒரு கப்
பயத்தம் பருப்பு - கால் கப்
உளுத்தம் பருப்பு - அரை கப்
இஞ்சி - சிறிய துண்டு
பீன்ஸ் - 10,
பச்சைமிளகாய் - 3
கேரட் - 1
பட்டாணி - அரை கப்
கொத்தமல்லி, பெருங்காயத்தூள், உப்பு, நெய் - தேவையான அளவு
செய்முறை :
* சிறுதானிய குருணைகளை 1 மணி நேரம் ஊறவிடவும்.
* கேரட்டை துருவிக்கொள்ளவும்.
* கொத்தமல்லி, பீன்ஸை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* பயத்தம் பருப்பு, உளுந்தம் பருப்பு இரண்டையும் 1 மணி நேரம் ஊறவிட்டு, பின் தண்ணீரை வடித்து விட்டு, ஊற வைத்த குருணைகள், பச்சைமிளகாய், தோல் நீக்கி நறுக்கிய இஞ்சி, பெருங்காயம் சேர்த்து நன்றாக அரைக்கவும்.
* ஒரு பாத்திரத்தில் அரைத்த மாவை போட்டு அதனுடன் கொத்தமல்லி, உப்பு, பீன்ஸ், கேரட் துருவல், பட்டாணி சேர்த்து இட்லி மாவு பதத்துக்கு கரைத்துக் கொள்ளவும்.(தேவைப்பட்டால் சிறிதளவு தயிர் சேர்க்கவும்).
* பின்னர் இட்லி தட்டில் சிறிதளவு நெய்யைத் தடவி, அதில் இட்லி மாவை ஊற்றி, வேகவைத்து எடுக்கவும்.
* இந்த இட்லி சத்தானது, எளிதில் செரிக்கும் தன்மை கொண்டது. சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு மிகவும் ஏற்றது இந்த இட்லி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X