search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    சத்தான கேழ்வரகு - காய்கறி உப்புமா
    X

    சத்தான கேழ்வரகு - காய்கறி உப்புமா

    தினமும் கேழ்வரகை உணவில் சேர்த்து கொள்வது நல்லது. இன்று கேழ்வரகுடன் காய்கறிகளை சேர்த்து உப்புமா செய்வது எப்படி என்று விரிவாக பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கேழ்வரகு மாவு - 1 கப்
    கேரட் - 50 கிராம்
    பீன்ஸ் - 50 கிராம்
    உருளைகிழங்கு - 50 கிராம்
    வெங்காயம் - 50 கிராம்
    மிளகாய் - 4
    உப்பு - தேவையான அளவு
    கறிவேப்பிலை - சிறிதளவு

    தாளிக்க :

     கடுகு, உளுந்தம்பருப்பு, எண்ணெய்.



    செய்முறை :

    * வெங்காயம், ப.மிளகாய், கேரட், பீன்ஸ், கொத்தமல்லி, உருளைக்கிழங்கை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

    * அடுப்பில் கடாய் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்தம்பருப்பு, கறிவேப்பிலை ப.மிளகாய் போட்டு தாளித்த பின் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

    * வெங்காயம் நன்றாக வதங்கியதும் காய்கறிகளை போட்டு சிறிது நேரம் வதக்கிய பின் சிறிது தண்ணீர் ஊற்றி அதில் உப்பு சேர்த்து காய்கறிகளை வேக வைக்கவும்.

    * காய்கறிகள் வெந்தவுடன் அதில் கேழ்வரகு மாவை சிறிது சிறிதாக கொட்டி கைவிடாமல் கிளற வேண்டும்.

    * தண்ணீர் வற்றி கொட்டியான பதம் வந்ததும் கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.

    * சத்தான கேழ்வரகு - காய்கறி உப்புமா ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×