search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    சத்தான சுவையான பனிவரகு கார அடை
    X

    சத்தான சுவையான பனிவரகு கார அடை

    சிறுதானியங்களை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்வது உடலுக்கு மிகவும் நல்லது. இன்று பனிவரகு அரிசியை வைத்து சத்தான அடை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்  :

    பனிவரகு - 250 கிராம்.
    கடலைப்பருப்பு - 50 கிராம்.
    துவரம் பருப்பு - 100 கிராம்.
    காய்ந்த மிளகாய் - 10.
    உப்பு - தேவையான அளவு.
    சோம்பு - 3 ஸ்பூன்.
    பெருங்காயம் - தேவையான அளவு
    எண்ணெய் - தேவைக்கேற்ப
    நறுக்கிய வெங்காயம் - 1 கப்.
    கறிவேப்பிலை, தேங்காய் துருவல் - அரை கப்.



    செய்முறை :

    * பனிவரகு, கடலைப்பருப்பு, துவரம் பருப்பு ஆகியவற்றை இரண்டு மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும்.

    * பின்னர் அந்த கலவையுடன் மிளகாய், சோம்பு சேர்த்து விழுதாக அரைத்து கொள்ள வேண்டும்.

    * அரைத்த மாவில் உப்பு சேர்த்து அரை மணிநேரம் அப்படியே வைக்கவும்.

    * அடுத்து அந்த மாவு கலவையில் நறுக்கிய வெங்காயம், தேங்காய் துருவல், கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

    * தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை அடைகளாக ஊற்றி சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுக்கவும்

    * சத்தான பனிவரகுக் கார அடை ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×