search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    சத்து நிறைந்த சாமை கறிவேப்பிலை சாதம்
    X

    சத்து நிறைந்த சாமை கறிவேப்பிலை சாதம்

    சிறுதானியங்களில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று சாமை அரிசியை வைத்து சத்தான கறிவேப்பிலை சாதம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    சாமை அரிசி - ஒரு கப்,
    கறிவேப்பிலைப் பொடி, உப்பு, எண்ணெய் - தேவைக்கு ஏற்ப,
    கடுகு, உளுந்தம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா கால் டீஸ்பூன்,
    நிலக்கடலை - ஒரு டீஸ்பூன்,
    காய்ந்த மிளகாய் - 2,
    கறிவேப்பிலை - சிறிதளவு.

    கறிவேப்பிலைப் பொடி செய்வதற்கு:

    கறிவேப்பிலை - ஒரு கப்,
    காய்ந்த மிளகாய் - 3,
    கடலைப்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன்,
    உளுந்து - 2 டேபிள்ஸ்பூன்,
    பெருங்காயம் - ஒரு சிட்டிகை,
    உப்பு - தேவைக்கு ஏற்ப.



    செய்முறை:

    * பொடி செய்ய கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை வெறும் வாணலியில் வாசம் வரும் வரை வறுத்து ஆறவிட்டு, பொடி செய்துகொள்ளவும்.

    * சாமை அரிசியை நன்றாக கழுவி, 10 நிமிடங்கள் ஊறவைத்த பின்னர் உதிரியாக வடித்து கொள்ளவும்.

    * வாணலியில் எண்ணெயைக் காயவிட்டு சூடானதும் கடுகு, உளுந்தம்பருப்பு, கடலைப் பருப்பு, நிலக்கடலை, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் ஆகியவற்றைத் போட்டு தாளித்த பின்னர் இதனுடன் கறிவேப்பிலைப் பொடி, வடித்த சாதம் இரண்டையும் சேர்த்துக் கிளறவும். தேவைப்பட்டால், உப்பு சேர்த்துக் கொள்ளவும்.
    * குறைந்த தீயில் 5 நிமிடம் வைத்து, மெதுவாகக் கிளறி, நன்கு கலந்துவந்ததும் இறக்கி, அப்பளம் அல்லது துவையலுடன் பரிமாறவும்.

    * சத்து நிறைந்த சாமை கறிவேப்பிலை சாதம் ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×