search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    காராமணிப் பொரியல் செய்வது எப்படி
    X

    காராமணிப் பொரியல் செய்வது எப்படி

    காராமணி மிகவும் சத்து நிறைந்தது. காராமணி பொரியலை சூடான சாதத்தில் போட்டு பிசைந்து சாப்பிட்டால் சூப்பராக இருக்கும். இன்று இந்த பொரியல் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    காராமணி - கால் கிலோ,
    வெங்காயம் - 1,
    இஞ்சி - பூண்டு விழுது - 2 டீஸ்பூன்,
    மஞ்சள் தூள் - அரை  டீஸ்பூன்,
    தேங்காய் துருவல் - 2 டீஸ்பூன்,
    சீரகம் - 2 டீஸ்பூன்,
    காய்ந்த மிளகாய் - 2,
    கடுகு - 1 டீஸ்பூன்,
    உளுந்தம் பருப்பு - 1 டீஸ்பூன்,  
    எண்ணெய் - 1 டீஸ்பூன்,
    கறிவேப்பிலை - சிறிது,
    உப்பு - தேவைக்கேற்ப.



    செய்முறை :

    * வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * காராமணியை நன்றாக கழுவி பொடியாக நறுக்கவும்.

    * கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்த பின்* வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.

    * வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி - பூண்டு விழுது, மஞ்சள் தூள் சேர்க்கவும்.  

    * இஞ்சி - பூண்டு விழுது பச்சை வாடை போனதும் காராமணியும் உப்பும் சேர்க்கவும்.

    * லேசாக தண்ணீர் தெளித்து மூடி வைத்து வேக விடவும்.

    * இதற்கிடையில் தேங்காய் துருவல், காய்ந்த மிளகாய், சீரகம் மூன்றையும் மிக்சியில் போட்டு ஒன்றாகப் பொடித்துக் கொள்ளவும்.

    * காராமணி வெந்ததும் பொடித்த தேங்காய் விழுதை சேர்த்துக் கிளறவும்.

    * குறைந்த தணலில் சில நிமிடங்கள் வைத்திருந்து எடுத்துப்பரிமாறவும்.

    * சத்தான காராமணிப் பொரியல் ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×