search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    சத்தான சுவையான கொத்தமல்லி தோசை
    X

    சத்தான சுவையான கொத்தமல்லி தோசை

    கொத்தமல்லியில் அதிகளவு மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது. சத்து நிறைந்த கொத்தமல்லியை வைத்து தோசை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    புளுங்கல் அரிசி - 1 கப்
    பச்சரிசி - 1 கப்
    உளுந்தம் பருப்பு - 1/2 கப்
    வெந்தயம் - 1 டீஸ்பூன்
    கொத்தமல்லி - 3/4 கப்
    பச்சை மிளகாய் - 5
    உப்பு - தேவையான அளவு
    நல்லெண்ணெய் - தேவையான அளவு



    செய்முறை :

    * கொத்தமல்லியை நன்றாக கழுவி பொடியாக நறுக்கி வைக்கவும்.

    * புளுங்கல் அரிசி, பச்சரிசி, உளுந்தம் பருப்பு, வெந்தயத்தை தனித்தனியாக 2 மணி நேரம் நீரில் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

    * பின்பு ஊற வைத்துள்ள அரிசிகளை கிரைண்டரில் போட்டு, அத்துடன் ஊளுந்தம் பருப்பு மற்றும் வெந்தயத்தையும் கழுவிப் போட்டு மென்மையாக அரைக்க வேண்டும்.

    * அப்படி அரைக்கும் போது பாதியில் கொத்தமல்லி, பச்சை மிளகாய் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும்.

    * அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் உப்பு சேர்த்து கலந்து 30 மணி நேரம் அப்படியே வைக்கவும்.

    * தோசைக்கல்லை அடுப்பில் வைத்து காய்ந்ததும், அதில் கலந்து வைத்துள்ள மாவை தோசைகளாக ஊற்றி சுற்றி நல்லெண்ணெய் ஊற்றி முன்னும் பின்னும் வேக வைத்து எடுக்கவும்.

    * சத்தான சுவையான கொத்தமல்லி தோசை ரெடி..

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×