search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    உடலுக்கு குளிர்ச்சி தரும் பொன்னாங்கண்ணி கீரை சாம்பார்
    X

    உடலுக்கு குளிர்ச்சி தரும் பொன்னாங்கண்ணி கீரை சாம்பார்

    கோடை காலத்தில் தினமும் ஒரு கீரையை உணவில் சேர்த்து கொள்வது நல்லது. இன்று பொன்னாங்கண்ணி கீரையை வைத்து சாம்பார் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பொன்னாங்கண்ணி கீரை - 1 கட்டு
    தக்காளி - 2
    பாசிப்பருப்பு - 1 1/2 கப்
     
    தாளிக்க :

    எண்ணெய் - தேவையான அளவு
    கடுகு
    உளுந்தம் பருப்பு
    சீரகம்
    வெங்காயம் - 1
     
    பொடி வகைகள் :

    சீரக பொடி  - 1 தேக்கரண்டி
    மிளகாய் பொடி  - 1 தேக்கரண்டி
    மஞ்சள் தூள் -  சிறிதளவு
    உப்பு - தேவையான அளவு


     
    செய்முறை :

    * தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    *  பொன்னாங்கண்ணி கீரையை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * பாசிப்பருப்பை சீரக தூள் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வேக வைத்துக்கொள்ளவும்.

    * பின் அதில் தக்காளியை சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.

    * அதில் நறுக்கிய கீரையை சேர்த்து தண்ணீரையும், மிளகாய் தூளையும் சேர்த்து வேக விடவும்.

    * முக்கால் பதம் வெந்தவுடன் உப்பு போடவும்.

    * கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் தாளிக்க கொடுத்துள்ளவைகளை போட்டு தாளித்து கீரையில் கொட்டி 2 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கவும்.

    * சத்தான பொன்னாங்கண்ணி கீரை சாம்பார் ரெடி.
     
    * இதை சாதத்துடன் சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×