என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
சத்து நிறைந்த டிபன் கீரைப் பணியாரம்
Byமாலை மலர்3 May 2017 5:21 AM GMT (Updated: 3 May 2017 5:21 AM GMT)
சிலருக்கு கீரை பிடிக்காது. அவர்களுக்கு கீரையை வைத்து இவ்வாறு பணியாரம் செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். இந்த பணியாரம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
சிறுகீரை - ஒரு கட்டு
தோசை மாவு - ஒரு கப்
பெரிய வெங்காயம் - 2
பச்சை மிளகாய் - 2
கொத்தமல்லித்தழை - சிறிதளவு
கறிவேப்பிலை - சிறிதளவு
கடுகு - ஒரு டீஸ்பூன்
கடலைப்பருப்பு, உளுதந்தம்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை :
* பெரிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழையைப் பொடியாக நறுக்கி வைக்கவும்.
* சிறுகீரையை நன்றாக கழுவி பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* அடுப்பில் வாணலியை வைத்து 2 டீஸ்பூன் எண்ணெய் சேர்த்துச் சூடானதும் கடுகு தாளித்து உளுந்தம்பருப்பு, கடலைப்பருப்பு சேர்த்துச் சிவந்ததும் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கிய பின்னர் கீரை, கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை சேர்த்து 5 நிமிடம் வதக்கிய பின்னர் அடுப்பை அணைக்கவும்.
* தாளித்த கலவையை மாவில் சேர்த்து நன்கு கலக்கவும்.
* அடுப்பில் பணியாரக் கல்லை வைத்து சிறிதாக எண்ணெய் விட்டு சூடானதும், மிதமான தீயில் வைத்து மாவை ஊற்றி ஒரு புறம் வெந்ததும் திருப்பிவிட்டு, இரண்டு பக்கமும் வெந்ததும் எடுக்கவும்.
* சத்து நிறைந்த கீரைப் பணியாரம் ரெடி.
குறிப்பு :
கீரையை வதக்காமல் பச்சையாக மிக்சியில் அரைத்து மாவில் கலந்தும் செய்யலாம். இதற்கு எந்த கீரையை வேண்டுமானலும் பயன்படுத்தலாம்.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
சிறுகீரை - ஒரு கட்டு
தோசை மாவு - ஒரு கப்
பெரிய வெங்காயம் - 2
பச்சை மிளகாய் - 2
கொத்தமல்லித்தழை - சிறிதளவு
கறிவேப்பிலை - சிறிதளவு
கடுகு - ஒரு டீஸ்பூன்
கடலைப்பருப்பு, உளுதந்தம்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை :
* பெரிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழையைப் பொடியாக நறுக்கி வைக்கவும்.
* சிறுகீரையை நன்றாக கழுவி பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* அடுப்பில் வாணலியை வைத்து 2 டீஸ்பூன் எண்ணெய் சேர்த்துச் சூடானதும் கடுகு தாளித்து உளுந்தம்பருப்பு, கடலைப்பருப்பு சேர்த்துச் சிவந்ததும் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கிய பின்னர் கீரை, கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை சேர்த்து 5 நிமிடம் வதக்கிய பின்னர் அடுப்பை அணைக்கவும்.
* தாளித்த கலவையை மாவில் சேர்த்து நன்கு கலக்கவும்.
* அடுப்பில் பணியாரக் கல்லை வைத்து சிறிதாக எண்ணெய் விட்டு சூடானதும், மிதமான தீயில் வைத்து மாவை ஊற்றி ஒரு புறம் வெந்ததும் திருப்பிவிட்டு, இரண்டு பக்கமும் வெந்ததும் எடுக்கவும்.
* சத்து நிறைந்த கீரைப் பணியாரம் ரெடி.
குறிப்பு :
கீரையை வதக்காமல் பச்சையாக மிக்சியில் அரைத்து மாவில் கலந்தும் செய்யலாம். இதற்கு எந்த கீரையை வேண்டுமானலும் பயன்படுத்தலாம்.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X